அனார் : சில குறிப்புகள்

உணர்வுக்குள்ளே மலையும் வனமும் பிரபஞ்சவெளியும் உண்டு! அனார், அச்சிறு கண்களின் வழி என்னுலகத்தை நிரப்பி அள்ளிக்கொடுக்கும் தாய்மையின் கருணை. தன்னைக் கண்டடைதலின் பிரகாரம் வாழ்வில் ருசிகொண்டவோர் மந்திரப்பேழை. கவிதையின் மொழிகளுக்குள் தழைத்து வாழ்வென்றாகியிருக்கும் இவ் உயிரைத் தூக்கிச்சுமக்கும் துணிவையும், தைரியத்தையும் தன் எழுத்துக்களின் வழி சேர்ப்பித்த என் மூத்தவருக்கு வாழ்த்துக்களும், நன்றியும், அன்பு முத்தங்களும். எத்தனையாயிரம் பாடுகளைக் கொண்டலையும் வாழ்விது. அனாரின் கண்கள் வழி நானடையும் கனவென்பது மொழியில் திளைத்து …

தீ மல்லிக் கொத்தே!

தன் சிறுவெண் பற்களைத் துலக்கிய பின் ஈறு தெரியச் சிரித்துக் காட்டும் குழந்தையைப் போல ரஜிதாவின் சொற்கள் விரிந்திருக்கின்றன. இவ்விரு கவிதைகளின் வரிகளும் குழந்தையின் அளந்தெடுத்த பல்முத்துக்கள். சொல்லிணைவுகளில் உள்ள பித்துநிலை கவிதையை வைர ஊசிகளென மினுக்குகின்றது. பொற்சிலைகருவிருந்த மலை படியளந்தாய் நீல இரவின்பனிப்படிவு துளிரும் அன்றிலும்தீரத் தீர செவ்விதழ் பொழி சாலை. * பற்றியவான் திரி சுண்டுவிழிப் பிரம்புபாய வேட்டைநாய்உறுமும் சிரை. எரிஎன்னை தீ மல்லிக் கொத்தே! ரஜிதா

தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை இரண்டின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட வாழ்வென்பது கனவு போலிருக்கின்றது. அவையே என்னைச் செதுக்கி இருக்கின்றன. குக்கூ மற்றும் தன்னறத்தின் வெளியீடுகளாக எமது அமைப்பிற்கெனப் பெற்றுக்கொண்ட புத்தகங்களில் வாழ்வதற்கான கருணையும், எளிமையும் மட்டுமே திருப்பத் திருப்ப சொல்லப்பட்டன. …

முத்துச் சரளைகளின் அறியாத கரையில்

தமிழின் நெடுங்கவிதை வரலாற்றில் ஆதி வாழ்வையும் காமத்தையும் எழுதிய பெண்களில் பெரும்பாலும் எஞ்சியிருப்பது பக்தியெனும் தன்னிலை. காரைக்காலம்மையார், ஒளவையார், ஆண்டாள் என்று தொடங்கும் கவிஞர்களின் சொல்லாழத்தை நவீன காலகட்ட அறிதல்கள் தன்னிலைகளை மாற்றியமைத்தன. பக்தியை உருமாற்றின. தானும் ஒரு நிகர் உயிரியெனும் ஆற்றல் எழுந்து வந்தது. “கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற்குழி வயிற்றுப் பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்” என்று காரைக்கால் அம்மையார் …