‘கனவே திறந்து விடு, உன் கதவை’  

(கருணாகரன்) ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார். ‘…இரவு; இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்; நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதில் கூட சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் கனவுகள் தம் அர்த்தத்தை இழந்தவைதான்..’ ‘… வெளியே பதற்றமற்று மௌனமாய் நிற்கும் மரங்களின் நிழல்கள் கீழே கிழிந்து போயுள்ளன…’ …

வையம் : இதழ்

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வையம் இலக்கிய மாத இதழில் அவயமிழந்தவர்கள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு ஒன்று இம்மாத இதழில் வெளியாகியிருக்கிறது. எனது ‘தொடுகை’ என்ற கவிதை இதழின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. சேரன், கருணாகரன், தீபச்செல்வன் ஆகியோரது கவிதைகளும்  வெளிவந்திருக்கின்றன.