24: வேழம் உரைத்தது
குருதி வெண்கோட்டு விரிவேழமேநீயுரைஎங்கோன் ஆற்றிய செங்களம் மிதித்த உன்கோற் கால்கள் எக்கனம் பொருதின எவ்விசை ஏகினகொல்வேழ் குறும்பாநின் திசை நோக்கிய என் துதி நீண்டிலைஆயிரம் ஆயிரம் பொன்னெதிர் கதிரேமாகரம் தூக்கி நின் சூர்முகம் போற்றி வேழ்முகன் மீதினில் ஆணைபோர்வெறி மீதினில் ஆணை படுகூர் மின் உருகம் மீதினில் ஆணைவான் உம்பர் மண்ணெதிர் நின்றாலும்தூகரிமாமுகமும் மாகரிநீள்கரமும் என் சேயோன் கழற்கே. பாணன் சென்னிச்செம்மலர் விரிந்த அரசமிலை போன்ற முகத்தில் நீள் துதி …
