கருணையான பைத்தியம்

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் தசையை வெட்டிக் கொடுத்து இரையாக இருந்த ஒன்றைக் காக்ககொடி படரத் தேரைக் கொடுத்து விட்டுநடந்து செல்லமகனின் கழுத்தைத் தேர்ச்சில்லுக்குப் பலியிட்டாகவலிப்பு நோயில் மடிந்தவனை மடியில் கிடத்திஇங்கு உனக்கொரு இடமிருக்கிறது என்று அழுவதாக நண்பர்களேகடைசி மோதகத்தில் …

களியின் ஆன்மீகம்

ஒரு வானமும் ஒரு மரமும் மிச்சமிருக்கும் வரை மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றாதிருக்க வேண்டுமென ஒலிக்கும் கவிஞனின் குரலே ஆதி பார்த்திபன். ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் அதன் நுண்மைகள் பற்றிய வரிகளும் கீற்றுகளிடையே நிலவெனத் தோன்றிக் கொண்டேயிருப்பவை. வாழ்வை போரின் ஓவியத்துணியில் வரைந்து பார்த்தவை. போர் உச்ச கட்ட உணர்ச்சிகளின் கொல்லன் துருத்தி போன்றது. ஊதுந்தோறும் பல்லாயிரம் தீப்பொறித் துளிகளெனச் சீறியெழுபவை. தீ பொன்னின் நிறமென ஆவது …

ஒரு கவிதைப் புத்தகம் : ஒரு உரை

கற்சுறா எழுதிய அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை என்ற கவிதைத் தொகுதி தொடர்பிலான உரை. யாழ் பொதுசன நூலகத்தில் நிகழ்ந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டது.

காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் : ஒரு உரை

ஈழத்துப் புனைவெழுத்தாளர்களில் கெளரிபாலனுக்குத் தனித்த இடமுண்டு. கதையாக்கம் என்ற அம்சத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் கொண்டவர். கெளரிபாலனது சிறுகதைகளின் முழுத்தொகுப்பிற்கான வெளியீட்டின் போது நிகழ்த்திய உரை. கட்டுரை : மென்னிழைகளால் நெய்யும் பூமி

எஸ் போஸ் : ஒரு உரை

இரண்டாயிரத்தின் பின் ஈழத்தின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராக எழுந்த எஸ் போஸ் அல்லது சந்திரபோஸ் சுதாகர் பற்றிய புறச்சித்திரம் ஒன்றை அளிக்க ஏழு வருடங்களுக்கு முன்னர் எஸ் போசின் முழுத்தொகுதி வடலி வெளியீடாக வந்திருந்தது. அதற்கென கிளிநொச்சியில் நிகழ்த்திய உரையின் காணொலி.

கவிதை தெய்வமன்றோ

தமிழில் சொற்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த மதிப்பு கவிதை. எம்மொழியையும் போல. ஆதியில் வார்த்தை இருந்தது என்பது பைபிளின் நம்பிக்கையும் கூட. அவ்வார்த்தையே தேவனோடு இருந்தது. தேவனாகவும் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. தமிழில் தெய்வங்களை அழைக்கும் பதிகங்கள் கவிதைகளாக இருந்த பண்பாட்டு புறச்சூழல் கவிதைகளுக்கு உண்டு. எனது கவிதைத் தொகுதியான வாழ்க்கைக்குத் திரும்புதலை என் ஆசிரியர்களென நான் வகுத்துக் கொண்ட அனைவருக்கும் அளித்து விட்டேன். அதில் முதலாவது தொகுதியை என் கையால் …

ஆதிரை : ஒரு சிற்றுரை

எட்டு வருடங்களுக்கு முதல் என்ன பேசியிருக்கிறேன் என்பதை விட பேச்சில் என்னைக் கவர்ந்த விடயங்கள் இரண்டு. ஒன்று, முன் தலையில் அலைபாயும் சிகை. இரண்டு, உரையை முடிக்கும் பொழுது அலைபாயுதே மாதவன் போல உதட்டைக் குவித்துச் சிரித்து அதுவரை சொன்னவற்றைச் சந்தேகப்படுத்தி புன்னகையால் இலக்கிய இடத்தை வகுப்பது. 😊.

கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்

ஈழத்துக் கவிதைகளின் வருங்கால அடைவுகளிற்கான திசைவழியை உண்டாக்கும் புதிய குரல்களின் வருகை கடந்த இரு வருடங்களில் நிகழ்ந்து வருவதை அவதானிப்பது ஒரு கவிதை வாசகனாக என்னை நிறைவளிக்கச் செய்வது. இவ்வருடம் ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக கவிஞர் வசிகரனின் “நோவிலும் வாழ்வு” எனும் தலைப்பிலான முதற் தொகுதி அண்மையில் வெளியாகியிருக்கிறது. ஈழத்துக் கவிதைகளின் பிரதான செல்நெறிகளைக் கிளைத்து முறித்து அதன் வழிநடைகளை விரிவுபடுத்தும் காலமெனக் கடந்த பத்தாண்டுகளைச் சுட்டிப்பாகச் சொல்லலாம். போர் …

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து …

முதற் குட்டி : மொழிபெயர்ப்பு

“முதற் குட்டி” கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பினை இப்னு அஸ்மத் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். தொடர்ச்சியான அவரது மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு வாழ்த்துகள். * පළමු පැටියා නිවසේ තිබූ සියඵ දේවලින් අම්මාව ගෙන එළියේ තැබුවෙමි අල්ලපු ගෙදරින් කාන්දු වූසාම්බ්‍රාණි දුමේ අග ඈ සිටියාය කොහේදීත් සැමවිට අතහරින්නේ නැතැයිපදිංචි වන කෙනෙකු මෙන් දහසකුත් දහස් වසරක්පළමු පැටියා ඉපදුනු දා පටන් ක්‍රිසාන්ත්සිංහලෙන් …