கண் மடல்கள் நீரலை போல அமைந்தெழ நிலவையின் மஞ்சத்தில் லீலியா துயிலில் இருந்தாள். தானகி நிலவையைச் சேய் போல அணைத்துக் கொண்டு துயின்றிருந்தாள். தென்னகத்திலிருந்து வந்த பெண் மொழிபெயர்ப்பாளினி சுவடிகை இருக்கை மஞ்சமொன்றில் தலையணையைப் பற்றிக் கொண்டு துயில் மயக்குக் கலைய எழுவதும் நினைவுகள்…
Category: அழிகளம்
89: களியிலாடு மயில்
அருள்வதும் மருள்வதும் பெண்ணின் இயற்கை. வளர்வதும் பொலிவதும் போல. தானகி தன் நினைவுகளின் இனிமைகள் அனைத்தும் நிலவையின் உடனிருத்தலில் எங்கனம் பூத்து மகிழ்ந்தன என எண்ணிக் கொண்டாள். அரசியினருகில் துயிலும் தோழியென்றாகி வாழ்பவள். சொல்லிலும் மெளனத்திலும் மெல்லிய அசைவிலும் கூட அவளை அறிந்தவள். நிலவை…
88: இச்சை அகம் : 02
ககனம் கருநீலப் பொருளின்மையெனத் தோன்றியது. பொன்னன் தன் மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு “சொல்லாடுவதும் ஒருவரை முற்றறிந்த பின்னரும் கூடுவதும் எப்படி மெய்மை அறிந்ததென்று ஆகும். ஒருவர் சொற்களில் தன் மெய்மையைத் தான் வெளிப்படுத்துகிறார் என எங்கனம் உய்த்தறிய ஒண்ணும். மானுட அகம் உறவுகளை…
87: இச்சை அகம்
காலமென்பது நிற்காத பெருஞ்சுழலில் சிந்தப்படும் ஒற்றைப் பெருமழை. அதில் வீழ்பவரோ வெல்லப்படுபவரோ வஞ்சம் கொண்டவரோ பழிசுமந்தவரோ கொடூரரோ மேன்மையானவரோ நல்லதோ கெட்டதோ ஞானமோ அஞ்னானமோ தவமோ பற்றோ மாபெருங் காவியமோ கீழ்மையின் பிறவிகளோ அனைத்தும் திவலைகளே. சுழல் எதனால் உண்டாகிறது. ஒழிச்சலில்லாத காட்டுபுரவிகளின் பெரும்…
86: அதியா
“இது கலிமுற்றி ஊழிமுதல்வன் எழுங்காலமென எரிவிண்மீன் ஆகாயத்தில் தோன்றிய அன்றே காலக் கணியர்கள் வகுத்துவிட்டனர் அங்கினி. நாம் காணும் அனைத்துக் களியும் ஊழியின் தாண்டவத்திற்கான ஒத்திகையே” என்றார் ஆடற் சித்தர். களியிரவில் அரவொன்று தன்னை உற்றிருப்பதைப் போல் மெய்ப்புக் கொண்ட அங்கினி காட்டு வாயிலில்…
85: நஞ்சு மழை
முதல் நாளிரவின் மயக்கிசையும் உடுக்கிசையும் அகத்தில் தாளமிட்டு எழுந்து கூச்சல் கொள்வது போல் தோன்ற விழித்துக் கொள்ளவென இமைகளை அசைத்த போது அவை காந்துவன போன்று விரிய மறுத்தன. சிற்பன் உதடுகளில் உலர்ந்திருக்கும் காய்ச்சலை வழித்துக் கொள்பவன் போல நக்கிக் கொண்டான். ஆழிப்புயலிடை சிறுகலத்தில்…
84: பெருவூஞ்சல்
மடாலயத்தின் பொன்வேய் கூரையின் மேல் புறாக்கள் சூரியச் சிறகுகள் பூண்டவை போல் ஒளியில் மினுங்கிக் காற்றில் எத்திக் குறுகுறுத்துக் கொண்டிருந்தன. புலரியின் பனிக்காற்று அல்லிக் குளத்தின் மேல் கவிந்து குளிரிலைகளை அலைத்தது. மாகதா ஊழ்க நிலையில் அல்லிக் குளத்தின் கரை மேட்டில் பனியில் பனியெனக்…
83: புலரியாட்டம்
“முன்னை நாள் களியென்பது அடுத்த நாள் வேடிக்கையே” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் ஓசையிலான். அவனது இடையாடை புழுதியும் சேறும் கொண்டு ஆக்கியதைப் போல் நிறத்திருந்தது. அவனது குழலில் சிறுமலர்ப் பிசிறல்கள் ஒட்டியிருந்தன. காதின் ஒரு மணிக்குண்டலம் எவ்விடம் தொலைந்ததென செவித்துளையை உருட்டிக் கொண்டிருந்தான்….
82: புலரிப்பனி
புலரி மெல்லக் கரைந்து ஒலிகளாகி இளம் பாணன் நின்றிருந்த சதுக்கத்தில் வெளிச்சம் கதகதப்பான குழவியின் தேகச்சூடென விழுந்து கொண்டிருந்தது. எத்தனை முறை நசிந்து மாண்டாலும் எங்கென்று அறியாத திசைகளிலிருந்து எழுந்து வந்து நிரையைச் சீராக்கி அறுபடாது தொடர்ந்து செல்லும் எறும்புகளைப் போல மக்கள் கூட்டம்…
81: வெறுந்தேகம்
சிற்பனில் எரியத் தொடங்கிய சூர்ப்பனகையின் கொல்காம மூச்சின் தழல் கருவானில் மின்னிடும் உடுக்களில் பட்டெதிரொளித்தது. வீணையின் தொன்மையான தந்திகளில் தொல்லிசை எழுந்தது. பறைகள் ஆயிரமும் மூச்சென உயர்ந்து வெறித்தன. ஆயிரம் உடுக்குகள் தலைசிலுப்பித் தோல்கள் அதிர்ந்தன. ஈசனை எழுப்பும் இசையென்றானவையில் எழுந்தாள் சூர்ப்பனகை. சிற்பன்…