70: நிலவறை
மதுச்சாலையின் மேற்தளத்தில் எருவீரன் முழுமயக்கில் வயிறுபிரட்டிக் கிடக்கும் முதலை போல் புரண்டு கிடந்தான். விழவின் களியில் மதியம் தொடக்கம் இடைவிடாது மதுவருந்தும் போட்டியில் கீர்த்த மந்திரரும் அவனும் சளைக்காது மூநாழிகை குவளை குவளையாய் யவன மதுவை உண்டு தலைசுற்றி மயங்கி ஒருவரின் மேல் ஒருவர் சாய்ந்து இருகுற்றிகள் போல் முட்டிக்கொண்டிருந்தனர். மதுச்சாலையைக் கவனிப்பதில் பயனில்லை என்ற நிலை உண்டானது. அவரவர் விரும்பிய வண்ணம் கள்ளிலும் மதுவிலும் குளித்தாடினர். முதுவிறலிகளின் முலைகளில் …
