சூரநடம்

சின்ன வயதில் சூரன் போர் பார்க்கப் போவது மகிழ்ச்சியான ஒன்று, சூரர்கள் கடவுளைப் போல அல்ல, வேடிக்கையானவர்கள், கோபமூட்டுபவர்கள், கொல்லப்படப் போவபர்கள் என்று பலவிதக் கற்பனைகளைக் கொண்டிருந்தேன். சூரன்போரில் பயன்படுத்தப்படும் முகமூடிகள், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மிக ஆர்வத்துடன் பார்ப்பேன். நல்லூரில் பரிவாரம் சூழ வரும் படைகள் மோதிக்கொண்டு மாங்காய்கள் பொறுக்கிக் கொண்டு சேவலும் மயிலும் வெளிப்படும் காட்சியில் உடம்பு சிலிர்க்க வைக்கும் நாடகம் திரும்பவும் அதே உக்கிரத்துடன் …

அந்தந்த நாள்களின் நற்குணங்களால்…

கவிதைக்கு மிருதுவான தோல் வளர்ந்து மென்மயிர்கள் முளைத்த குட்டிப் பூனையாய் ஒரு குழந்தையின் கையிலிருப்பதைப் போல் தர்மினியிடம் கவிதை மொழி பயின்று வருகிறது. வாலை மெல்ல நேராக நிமிர்த்தியபடி கொட்டும் மழைக்குள்ளால் ஓடி, ஈரத்தை உதறிக்கொண்டே வெதுவெதுப்பைத் தேடிச்செல்லும் பூனையென மென்பஞ்சுத் தோலாடையின் மீது சாய்ந்து கொண்டே கணகணப்பூட்டிக் கொள்கிறது. கீழுள்ள இரண்டு கவிதைகளிலும் பயிலப்படும் மொழி தமிழ்க்கவிதைகளில் முக்கியமான ஒரு அடைவு. ஒரு குட்டிப் பூனையின் நேர்த்தி என்று …

காமம் செப்பாது

உலகை ஒரு தட்டையான மாபெரும் புல்வெளியென உருவகித்துக் கொண்டால் அதில் கோடிக்கணக்கான புரவிகள் ஒன்றுரசி ஒன்றுமேவிப் பாய்ந்து நகர்வது போல் காமத்தின் பயில்வுகள் நகர்ந்து கொண்டிருகின்றன. காமம் மானுட விசைகளில் அடிப்படையானது. அதன் நுண்மைகள், உச்சங்கள், பிறழ்வுகள், அதீதங்கள், மரபுகள், நெறிகள், தவறுகள், சரிகள் தான் மானுட உறவுகளைத் தீர்மானிக்கும் அடிப்படையான கூறு. அதே நேரம் காமம், காமத்திற்கு அப்பாலான வாழ்வின் விசைகளையும் நோக்கி நகர வேண்டியது. காமத்தின் எல்லைகளுக்கு …

மறைந்து மறைந்து தெரியும்

காதலினால் ஊதப்படும் வண்ணச் சவர்க்காரக் குமிழியில் ஒளிரும் அபூர்வமான நிறச் சிதறல்கள் எண்ணற்றவை. காதலின் கணங்களும் அத்தகைய விரிவுகள் கொண்டவை. இன்றைய காலகட்டத்தில் காதலின் பெரும்போக்கான ஒற்றை உரையாடல்கள் உடைப்பெடுத்து அதீத மிகை பாவங்கள் கைவிடப்பட்டு, அதனை அதுவாகவும், அதன் இருட்டையும் ஒளியையும் நிறங்களின் கரைசலெனவும் கலைகள் ஆக்கக்கூடிய காலம். இக்காலத்தின் கவிதைகளில் வெளிப்படும் நுண்மைகள் இதற்கு முன்னர் இத்தனை எளிய வடிவத்தில் நுண்மையாக்கம் பெற்றதில்லை. போகன் சங்கரின் சில …

இந்தாங்கோ இனிப்புத் தட்டு

வாழ்வில் இனிப்பதைப் பகிர்வதே முதன்மையானது. நாம் வாழும் காலம் தினந்தோறும் எதிர்மறை மனநிலைகளாலும் கசப்பின் கசடுகளாலும் பனித்திரையெனச் சூழப்பட்டிருக்கிறது. இதனிடையில் இந்தா வைத்துக் கொள் என வயதான பாட்டியோ தாத்தாவோ யாருமறியாமல் கைபொத்தி அழுத்தித் தரும் ரகசிய இனிப்புத் துண்டெனக் கவிதைகளை எழுதுகிறார் ஆனந்த்குமார். இனிப்பின் தித்திப்பை நாவுகளும் காதுகளும் இதயங்களும் மறந்துபோகலாகாது. வாழ்க்கை மகிழ்ச்சியான கணங்களின் தொகுப்பாக மட்டுமே எஞ்சுவது. அதற்கு மேல் எதுவும் கணக்கல்ல. வாழ்வின் நொடிகளை …

கவிப்புதிர்

ஓர் அறிவிப்பு 52 வது சுவிஸ் இலக்கியச்சந்திப்பைத் தொடர்ந்து 53வது இலக்கியச் சந்திப்பை இத்தாலியின் சிசில் தீவில் நடத்தலாம் என இருக்கிறேன். அனலைதீவில் நடத்த ஆதரவளித்த நண்பர்கள் ஐரோப்பாவின் காலடியில் நசிவுண்டு கிடக்கும் சிசில் தீவில் 53வது இலக்கியச் சந்திப்பு நிகழ ஆவன செய்ய வேண்டுகிறேன். அந்த சிலக்கியச் சந்திப்பை ஒட்டியும் ஒரு தொகுப்பு வெளியிடலாம் என வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன். இம்முறை கவிதைத்தொகுப்பு. யாரையும் புண்படுத்தாத, விடுபடல்களே இல்லாத பெருந்தொகுப்பு …

தவளைத் தாவல்: கடிதம்

லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், கவிதையின் முதற் சொற்கள் கலையாடிகளின் வாயிலிருந்து எழும் உச்சாடனங்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறேன். அதன் ஆதித்தன்மை இன்றளவும் மாறுபடவில்லை. ஒரு வடிவத்தின் எல்லைகள், பிறப்பில் மனித உடல் ஆவதைப் போல் நிலைகொள்பவை. அவற்றின் உள்ளுயிரை வேறுவேறு வகையில் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றாலும் வடிவம் பற்றிய எல்லைகள் அதன் பிறப்பியல்பால் மட்டுப்பாடு கொண்டவை. சொல்லில் திகழும் கலையே கவிதை. இதற்கு மாற்றான பார்வைகள் …

மாய மருத்துவம்

வசீகரமான ஒரு பரிசை, ஒரு ஆச்சரியத்தை முதன் முதலில் ஒருவருக்கு அளிக்கப் போகும் மனம் சிலிர்த்துக் கொண்ட மயிர்க்கொட்டியென சுணைத்தபடியும் உள்ளூர வியந்தபடியும் நடந்து கொள்ளக்கூடியது. நான் யாருக்கும் பரிசளிப்பதில்லை. அல்லது ஒரு பொருளை பரிசென்னும் மகத்துவத்துடன் காவிச்செல்வதில்லை. எனக்குப் பரிசளிக்கப்படுவதிலும் ஆர்வமற்றவன். அதில் ஏதோவொரு கொழுவி எனக்குள் இருக்கிறது. ஒரு விலக்கம். பரிசுடன் வருபவர் என்னை நெருங்கிவிடுவார் என்பது போல் ஒரு மயக்கு. இதயத்தை மட்டும் இதுவரை பரிசளித்திருக்கிறேன். …

எய்யப்படுதல்

உள்நெஞ்சின் ஊற்றிலிருந்து அன்றாட வாழ்விற்குள் தினமும் எய்யப்படுவதே வாழ்வா? உறக்கத்தை ஊற்றில் உறைதல் எனக் கொண்டால் விழிப்பு நனவிற்குள் நுழைதலா? சபரிநாதனின் நச்சுச்சுனை கவிதையில் உள்ள எய்யப்படுதல் என்ற சொல் மொத்த வரிகளையும் அதன் அர்த்த ஒருமையிலிருந்து பிறிதொரு வெளிக்குள் எய்யப்படும் கவிதையாக மாற்றியிருக்கிறது. அபூர்வமான தன்மை என்பது கவிதையில் நாணேற்றப்படும் சொல்லிலும் அந்தக் காண்டீபத்தைப் பிடித்திருப்பவரின் பார்வை எதை எதற்கு அப்பால் பார்க்க விழைகிறது என்பதிலும் குடிகொண்டிருக்கிறது. அந்தராத்மாவின் …

ஒரு புரட்சிகர குட்மோர்னிங்

ஒரு புத்தக நிகழ்வில் நானும் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ள அழைப்பொன்றை முகநூலில் அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியானதுதான் தாமதம், சிலர் பாய்ந்து விழுந்து அதற்குக் கண்டனமும் கடும்விசனமும் தெரிவித்திருப்பதாக நண்பர்கள் சொல்லினர். இனிய நண்பர்களே, இனிமேல் இது வழமையாக நடக்கப்போகிற ஒன்று. கண்டன அறிக்கைகள், முகநூல் புரட்சிகள், வசைகள், பேரணிகள், மாநாடுகள், உருவ பொம்மை எரிப்புகள் எல்லாம் இனிமேல்த்தான் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இனி நான் எழுத்தாளர். என் உள்ளுணர்வை மதித்தே …