23: வெறியாட்டன் உரைத்தது

ஆடுக ஆடுக பேய்க்களியொன்றைதேடுக தேடுக வெம்மார்பொன்றைதீயினில் கருக செந்நாவென்றைவேலினில் கூரிய கருநாவொன்றைஆடுக ஆடுக வெறியாட்டொன்றைதேடுக தேடுக குறுவாளென்றைகுருதியில் மலரச் செம்பூவொன்றைகுருதியில் மலரக் கரும்பூவொன்றை. வெறியாட்டன் சூர்விற்பன் வனக் கொற்றவையின் கற்சிலையில் நீண்டிருந்த தளிர் நாக்கை நோக்கியிருந்தான் சத்தகன். அவள் பேயுருக் கொண்டு ஆடும் தோற்றத்தில் அந்த நாவு மட்டும் சிறு கருணையின் முனையென நீண்டு தழைத்திருப்பதாகத் தோன்றியது. செஞ்சாந்துகளும் மஞ்சளும் குழைத்துப் பூசிய கருங்கல் மேனியில் கூந்தல் நெளிநாகங்களென அலைந்துறைபவை. …

22: தூமழை உரைத்தது

செருக்களமேவிய புரவியே நீயுரைமாகளன் ஏந்திய வாள்முனை கண்டனையோமின்னவன் விழிகள் உற்றனையோகூவிடும் புலிக்குரல் கேட்டனையோதேர்ச்சில் சுழல் குருதிக் கூத்தில் தாளக் கால் பூண்டனையோஇன்னிரா இராத்திரியில் சுடர் மீன்கள் விம்மினையோஅழியாட்டு வெஞ்சேற்றில் அழலெனத் திரும்பினையோ வருதோழர் உயிர் நீங்கக் கூற்றன் கயிறாகினையோ என் மாகளன் நெஞ்சம் கேட்டிட நீயுரைஆடுமஞ்சள் நோக்கியிரு விழிகள் உண்டு வேந்தேஉயிர்ப்பிலம் பற்றி நீ சென்ற வழி காற்றாடும் குடசத்தில் உற்று என. பாடினி தூமழைப் பூம்பொழில் தன்னைத் தானே …

21: சங்கு உரைத்தது

ஆங்கிவன் அளித்த அடு தமிழ்ச் சங்கே ஓங்கி நீயுரைஆழி வயிறு புக்குவேன் செருச்சேறு பூசுவேன்தூமிகு வெண்சங்கே நீயுரைஏதற்ற பெம்மான் எந்தை குலப் புலிஏற்றிய நுண்சங்கே நீயுரைகூடிய விறலியர் பாணரும் பொருநரும் கூறிய கூர்வாள் தடங்கை சேர்த்தவன்காணிய கனவைக் கண்டதும் உற்றவன்கேளிர் என நின்று களஞ் சேர் விண்சங்கே. பாணன் ஏழிசைக் கூத்தன் புலரியின் முதற் புள் பாடத்தொடங்கிய வேளை வனத்தின் எல்லையில் கூடியிருந்த புலிப்படை வீரர்கள் கரிகொண்டு பல்துலக்கி ஆற்றில் …

20: முத்து எழல்

கைகளை உயர்த்தி ஆடவரை நோக்கி வழியை விலத்திச் செல்லுங்கள் எனக் கத்தியபடி வெள்ளி முகபாடம் அணிந்த யானையிலிருந்து முத்தினியும் செழியையும் தாமரைக் காம்புகளைக் கூடையிலிருந்து அள்ளியெறிந்து பூசலிட்டனர். காவலுச் சென்று கொண்டிருந்த அலவனின் மீது வெண்தாமரையொன்றை வீசினாள் முத்தினி. அதைக் கைகளில் பிடித்துக் கொண்டவன் திரும்பவும் முத்தினிக்கு எறிய அது யானையின் முகபாடத்தில் பட்டு விழுந்தது. “அலவா, இப்படி எறிந்தால் எதிரிகள் மார்புக்கு அம்பைக் குறி வைத்தாயென்றால் அது எங்கே …

19: லீலி எழல்

விழிகளில் நீர்பெருக்கு அணைந்த போது லீலியா இளம் மஞ்சென ஆனாள். கடற்கரையில் அலைந்தும் பெட்டிகளின் மேல் தாவியும் கலகலத்தும் கொண்டிருந்த குடிகள் அவளுடைய நெடிய உருவைக் கண்டு விழி மலைத்து நோக்கினார்கள். செலினி ஒரு வாத்தைப் போல கரங்களை ஆட்டி மணலில் கால்களை விசிறிக் கொண்டு லீலியாவின் அருகில் வந்தாள். புருவங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த மயிற் பீலி வர்ணக் குற்றுகளாலான கண்களை நோக்கினாள். “லீலி, என்னவாயிற்று உனக்கு புலக்காட்சி ஏதேனும் …

18: உசை எழல்

முதற் சொல்லை உசை கேட்ட போது அது ‘நீலா’ என்றொலித்தது. தன் பசுஞ் சிறகுகளைக் கொத்தி அப்பெயர் தனக்குள் எங்கேயிருக்கிறதென்று தேடிச் சலிப்பவள் உசை. ஒவ்வொரு பீலியாய்க் கொவ்வைச் சொண்டால் கீறி இது தான் நீலாவா என பார்ப்பவள். ஆலம் விழுதுகளைக் கயிறாகக் கட்டியிழைத்த மரக்கூண்டில் தன் தாய்க்கிளி நூற்ற கூட்டின் தும்புக் குவியலில் அயர்ந்து படுத்திருந்து அப்பெயரைக் கனவில் கேட்பவள். நீலழகனின் குடிலில் எந்நேரமும் அகலெரியும். அங்கு வரும் …

17: அரூபம் எழல்

மதுச்சாலையின் அன்ன வடிவக் கொத்து விளக்குகள் ஒளிக்குமிழிகளைப் போல் ஓவியங்கள் தீற்றப்பட்ட சுவர்களிலும் தரையிலும் குமிந்திருந்தன. விளக்குகள் இல்லாத இடங்களில் கருமை கலைந்த கூந்தலெனப் படிந்திருந்தது. முது பாணர்களும் விறலியரும் பாகர்களும் படை வீரர்களும் முன்னாள் வீரர்களும் குடிகளில் சிலருமென கலவையான மனிதர்கள் மரக்குற்றிகளில் அமர்ந்து கொண்டு கரும் பாறையாலான தட்டுகளிலும் சாணத்தால் மெழுகப்பட்ட திண்ணைகளிலும் செம்மண் தரையிலும் தலைகளையும் உடல்களையும் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் குறட்டை ஒலிகள் …

16: ஈச்சி எழல்

வெஞ்சுரம் நெஞ்சில் உலைய உடலை அசைக்காமல் இருண்ட குடிலின் கூரையை நோக்கியிருந்தாள் நிலவை. அவள் இக்குடிலுக்கு வந்து அரைப்பருவம் சென்றோடி விட்டது. இருளிலே இருந்து இருளிலே எழுந்து இருளிலே விழிகளைப் பார்த்து நாளெலாம் அமர்ந்திருப்பாள். நாளைக்கு ஒருவேளை கிழங்குகளோ புல்லரிசிக் கஞ்சியோ கொணர்வாள் மாதுமியாள். அவளைத் தவிர வேறு ஒருவருடனும் அவள் ஒரு சொல்லும் பேசுவதில்லை. அதிகாலையில் மாதுமியாள் வந்து அவளைக் காலைக்கடனுக்கும் குளிப்பதற்கும் அருகிலிருந்த குளத்திற்கு அழைத்துச் செல்வாள். …

15: நிலவை எழல்

வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரொன்றை நிலவை கூந்தலில் நுழைத்துத் தன் விரல்களால் அழுத்திக் கொண்டாள். உசை “நீலா. நீலா” என்று மிழற்றியது. உசை தன் சிவந்த ஆரத்தை வளைத்து கொழு அலகைத் திறந்து குறுநாக்கை வெளியில் நீட்டி உள்ளிழுத்தாள். நிலவை தன் குடியிலிருந்து நீலழகனின் படைவீரர்களுடன் வனக் குடிலுக்கு அழைத்து வரப்பட்ட பொழுது அக்குடிலில் இருந்த கூண்டில் தன் பசுஞ் சிறகுகளை விரிக்காமல் உலகைத் தன் புன்விழிகளால் …

14: இருதி எழல்

ஆழி நிறைவது உப்பின் கண்ணீர் என நினைத்துக் கொண்டாள் இருதியாள். பனைகளின் பாளைகளில் கீறிய பசும் வெட்டிலிருந்து கள் கலயங்கள் நிறைவது மண்ணின் கண்ணீர் என விழிகளை உயர்த்தினாள். அலைகடலின் வெண்மணலில் வெய்யில் குழந்தை வடிவில் துயில்ந்து புரள்கிறது எனக் கால்விரல்களை அழுத்திக் கொண்டாள். விடியலின் முதற் கலனாகத் திரும்பியது துமிலரின் நீல வர்ண நெடுங்கலன் உப்பினி. கலம் நிறைய மீன்களும் சிங்க இறால்களும் குவிக்கப்பட்டிருந்தது. வலையினை எடுத்தபடி துமிலர் …