கண்ணீர் மிக்க ஒளியுடையது

ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை. அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. அதற்குள் எப்பொழுதும் முடிவுறாத குற்றவுணர்ச்சிகளினதும் பொறுப்பேற்றலினதும் குரல் தளும்பிக்கொண்டேயிருக்கும். உறுதியான நம்பிக்கைகள் எரியும், பின்னர் அது நீறாகும், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அவரது கவிதைகள் தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்கும். குற்றவுணர்ச்சியின் முனைகள் மொழியுள் முளைக்கும் …

குழந்தையின் திகைவிழிகள்

இயற்கையுடன் கவிஞரொருவர் நிற்கும் ஒளிப்படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பது, அவரும் அவ் இயற்கையின் பகுதியென உணர்வதன் அறிதலளிக்கும் மகிழ்வு அது. மரத்தடியில் நிற்குமொருவர் அதன் பூவோ காயோ கனியோ வேரோ விழுதோ ஆகுபவர். நீர்வீழ்ச்சியின் அருகில் நிற்பவர் அதன் பெரும் வீழ்வோ உறையும் கற்பாறைகளோ கரையில் எழுந்து நிற்கும் சிறுபுல்லோ ஆகுபவர். கடலுக்கு முன் நிற்கும் கவிஞர் கடலின் அலையெனவோ மினுங்கும் நீலமெனவோ சூரியன் ஒளிந்து கொள்ளும் விரிதடாகமெனவோ ஆகுபவர். …

புலிக்கு அதன் உடலே கானகம்

பெண் தன்னிலை தன் இருப்பின் திறவுகளுக்கு மொழியின் பிரக்ஞ்ஞையில் அறுக்க வேண்டிய தளைகளை, கவிதை ஒரு தோட்டக்காரரைப் போல் தேவையற்றதை வெட்டி, தேவையானவற்றைப் பராமரித்து நீரூற்றிப் பாதுகாத்து வருகிறது. மொழிக்குள் பெண் குரல்கள் தனது வாழ்வின் ஆதார விசைகளின் உந்துதலை தன் உடல் களைய வேண்டிய புனிதங்களை உள்ளம் பொருள் கொள்ள வேண்டிய தன்னிலைகளை முன்வைத்தபடியே நகர்ந்து வருகிறது. குட்டி ரேவதி மொழிக்குள் நுழைந்த காலம் தொடக்கம் மொழியின் ஈரலிப்பை …

உருவச் சிதைப்பிலிருந்து பருமட்டான உருவத்துக்கு

* கண்ணாடிப் பேழைக்குள் நெளியும் பாம்புகள். திருவிழாத் தெருக்கள் கலகலத்துக் கொண்டிருக்கின்றன. ஞாபகம் தன் அந்தக் கணத்திலிருந்து ஆதிக் கணம் வரை திரும்பத் திரும்ப அலைகிறது. பாதளக் கிணற்றில் ஓடும் மோட்டார் சைக்கிளைப் போல் மறுபடியும் மறுபடியும் வளைய வளைய சுற்றுகிறது. ஒரேயொரு “கிளிப் ” வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். அம்மா ஞாபகங்கள் இராத்திரித் திருவிழாவில் சீலையில் முடிந்திருந்த தாள்களில் சிலவற்றைத் தருகிறாள். விபூதி வாசம் குங்கும முகம். எல்லா …

பொன் வாள்

மொழிக்குள் சில கவிஞர்கள் அரிதான ஒருங்கிணைவுகளைப் பெறுவார்கள். ஒரு மக்கள் திரளின் கூட்டு மனத்தின் பொன் வாளென அவர்களது கவிதைகள் திரண்டு வருவன. அவை போருக்குரியவை அல்ல. அம்மக்களின் அகத்தின் ஒவ்வொரு இழைகளும் நுட்பங்களும் உருகித் தங்கமென வழிந்து, பரவி, இறுகி, பிடியிடப்பட்டு, கூர் தீட்டப்பட்டு தகதவென மின்னி உறைபவை. சேரன் ஈழத்தின் நிலத்தையும் அகத்தையும் மொழியுள் திகழ வைத்தவர். அவரின் நிலக்காட்சிகளின் அவதானிப்புகள் பலநூறு வரிகளின் மூலம் ஈழத்தை …

ஒரு குட்டி நட்சத்திரம்

மொழிக்குள் அரசியல் பிரக்ஞை உள்நுழைவது கத்தியால் அதன் இதயத்தைக் கீறி அதை மீளத் தைப்பதைப் போன்றது. அதன்பின் அதுவரையான மொழியுடல் வெட்டப்பட்ட மரமொன்று மீளத்துளிர்ப்பதைப் போல, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கின்றது. சிவரமணியின் கவிதைகள் மொழிக்குள் சீழ்பிடித்திருந்த ஆணாதிக்க சமூக ஒழுங்கைக் கத்தியால் வெட்டியகற்றும் எத்தனமும் கூர்மையும் கவித்துவ ஒருமையும் கூடியவை. பெண்ணுளம் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளை தன் கவித்துவ வீச்சால் சொக்கப்பனை கொழுத்த முன் இரண்டே வெட்டில் மூன்றாய் …

நூல் பிறையளவு கொடை

கசந்து வெண்ணிறமாகப் புன்னகைக்கும் மொழி பிரான்சிஸ் கிருபாவினுடையது. மொழி ஒரு கோப்பை வைன் என்றால் அதன் ஆயிராமாண்டு காலத் துயர் பிரான்சிஸின் சொற்களில் வடியும் கைப்பு. வாழ்வின் உவர்ப்பளிக்கும் அந்தரத்துடன் கத்திக் கொண்டு எதிர்ப்படும் மொழி, பைத்தியம் நிறை சொற்களால் இன்னொரு அகத்தை கையில் பற்றி உலுப்பி அறைந்து நீதி கேட்பவை. நீங்கள் ஏன் என்னைக் கைவிட்டீர் என்று ஒவ்வொரு கைவிடலுக்கும் ஒவ்வொரு விலக்கத்திற்கும் காரணம் கேட்பவை. பின்னர் தன்னைத் …

ஆகுதல்

எங்கோ நான் எரிவது நீ பார்க்கத் தானெனஒளிரும் நட்சத்திரம் இவ் வாழ்க்கை. எங்கோ நான் அலைபடுவதுஉன் கண்களில் விழ. எங்கோ எனது பெயர் சல்லடையாக்கப்படுவதுஉன்னில் ரணமென விழுந்த புண்ணைவடுவாக்க. அழியாமல் உன்னில் வாழும் வேட்கையைஅழியாமல் பாதுகாக்கநான் விசும்பென ஆவேன். (2024)

எரியும் ஒரு பிடிப் பிரபஞ்சம்

மனதின் உள்ளிணைவுகள் தீவிரங் கொண்டு மொழியை மோதுகையில் சிதறும் நட்சத்திரத் தீற்றல்கள் என மொழியில் பட்டுத் தெறித்தவை பிரமிளின் கவிதைகள். பிரபஞ்சம் என்பது ஓர் பருவெளி. அதன் நிறக்கோலங்கள், கருவிடை வெளிகள், காலங்கள் அமிழாமல் உறையும் துளைகள், தூசுகள், கிரகப் பாறைகள் என்று அளவிலாத பருக்களின் விரிவெளியெனப் பரந்து நிற்பது அது. மனித மனத்தின் உட்சாரமும் பிரபஞ்சத்தின் பருச்சாரமும் ஒன்றின் இன்னொரு வடிவங்களென ஆகுவது இத்தன்மைகளாற் தான். பிரமிள் மொழிக்கூட்டின் …

மகத்தான மாகளிறு

தமிழ்க்கவிஞர்களை ஒரு யானைக் கூட்டமென்று கொண்டால் மொழிக்காட்டில் அலையும் இக்கூட்டம் அதன் மூதறிவைச் சுமப்பவை. தம் உணர்கரத்தால் திசைகளையும் நறுமணங்களையும் உள்ளீர்ப்பவை. பித்தேறி வெருண்டு காட்டைப் புரட்டுபவை. அக்கூட்டத்தின் மகத்தான மாகளிறுகளிலொருவர் மனுஷ்ய புத்திரன். மொழியை மிக நீண்ட புனைவுப்பரப்பென ஆக்கி நாவல்களுக்கு நிகரான உரையாடற் பரப்பைத் தனக்குள் கொண்டது அவரது கவியுலகு. எத்தனை நூறு மகத்தான வரிகளை அவர் ஆக்கியளித்திருக்கிறார். சிலவேளைகளில் மண்டியிடுகிறார், சிலவேளைகளில் தூக்கிப் போட்டு மிதிக்கிறார், …