சிவராஜ் : அணையா நெருப்பின் சுடர்

19 வயதில் தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க கொடுத்த மனம் அதன் தன்மை மாறாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. குக்கூ துவங்கிய நாள் தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா செயல்கள் நம்பிக்கைகள் நினைத்து பார்க்க முடியாதளவு மனிதர்கள் நன்மை அடைந்துள்ளனர். ஒரு பெரும் செயல்கள் நில்லாமல் இந்திய நிலப்பரப்பெங்கும் நடைப்பெறுகிறது. இந்த தினமணியின் முதல் பக்க செய்தி 1999 ஆண்டில் வெளியானது. இத்தனை காலம் ஒன்றில் நிலைத்திருந்து …

தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்

கடந்த வருடத்திற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படுபவர்களைத் தன்னறம் குழுவினர் எடுக்கும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. ஒவ்வொரு ஆளுமையினதும் துல்லியமான இயல்புகளையும் உடலசைவுகளையும் கைப்பள்ளத்தில் அள்ளிச் சேர்க்க முனைபவை. ஷோபா சக்தியின் ஆவணப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமானது. இன்றளவும் ஈழத்தில் அவரது புனைவுலகம் குறித்த முழுமையான மதிப்பீட்டை நான் உட்பட எவரும் இன்னும் எழுதவில்லை. ஒரு இரகசிய இயக்கத்தின் …

தன்னறம் இலக்கிய விருது : 2025

“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு வார்த்தை எப்படியான அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும் என்று துருவியகழும் செயலாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு வார்த்தையின், ஒரு வாக்கியத்தின், ‘தொனி’யைப் பிடிப்பதற்கு நாம் வார்த்தையை, வாக்கியத்தைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதாவது, மூலப்பிரதி அதன் …

அந்த ஆறு நிமிடங்கள்

தன்னறம் விருது விழாவில் ஷோபா சக்தி ஆற்றிய தன்னுரை வெளியாகியிருக்கிறது. ஈழத் தமிழர்களில் எவரேனும் ஒருவர் அதைப் போன்ற ஒரு நன்றியுரையை வழங்க இயலுமா என எண்ணிப் பார்க்கிறேன். வாய்ப்பேயில்லை. அந்த ஆறு நிமிடங்களென்பவை ஷோபாவின் உலகில் அன்றாடங்கள். எங்கள் நிலத்தின் அசல் முகம்.

ஷோபா சக்தி : உரையாடல்

தன்னறம் விருதுகளின் போது விருது பெறுபவர்களின் நேர்காணல் வெளியாவதுண்டு. அவை அந்த எழுத்தாளுமையின் குரலில் அவரது வாழ்வைக் குறுக்கும் நெடுக்குமாய் விபரிப்பது போன்றவை. இவ்வருடம் விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர், நடிகர் ஷோபா சக்தியுடன் தன்னறம் குழுவினரின் நேர்காணல்.

தன்னறம் விழா : இடமாற்றம்

ஷோபா சக்திக்கான தன்னற இலக்கிய விருது விழா நிகழ்வு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நாள்: 28 டிசம்பர் 2024நேரம்: காலை 10 மணிஇடம் : நெல்லிவாசல் மலை கிராமம்

தன்னறம் விருது : ஷோபா சக்தி

“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! …

முதுவான் கவிதைகள்

உலகிலே பேசப்படும் மொழிகளிலெல்லாம் காதல் அரும்பவும் தழைக்கவும் பூக்கவும் கூடிய யாவிலும் உள்ள பொதுத்தன்மைகள் மாறாது. காதல் எங்கு பூப்பினும் அதன் சுகந்தம் பரவிக் கொண்டேயிருப்பது. ஆதார விசைகளில் காதல் உண்டாக்கும் மாயங்கள் ஒன்று போலவே தோன்றுவது மானுட இயல்பு. கேரளப் பழங்குடிகளில் பதினொரு மொழிகளில் பதினெட்டுக் கவிஞர்களின் கவிதைகளை நிர்மால்யா மொழிபெயர்த்து தன்னறம் பதிப்பக வெளியீடாக ‘கேரள பழங்குடி கவிதைகள்’ எனும் பெயரில் வெளிவந்திருக்கிறது. இத் தொகுப்பில் அசோகன் …

தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை இரண்டின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட வாழ்வென்பது கனவு போலிருக்கின்றது. அவையே என்னைச் செதுக்கி இருக்கின்றன. குக்கூ மற்றும் தன்னறத்தின் வெளியீடுகளாக எமது அமைப்பிற்கெனப் பெற்றுக்கொண்ட புத்தகங்களில் வாழ்வதற்கான கருணையும், எளிமையும் மட்டுமே திருப்பத் திருப்ப சொல்லப்பட்டன. …