123: ஆழிசூடிகை : 03
இருதியாள் தனது நினைவுகளின் ஆழிக்கரையில் ஓடிய நண்டுகளைத் துரத்தும் வேறுகாடாரைக் கண்டாள். போர் முனை நீங்கிக் கரை வந்த போது மேனியில் களைப்பு குளிரலைகள் ஆற்றும் வெய்யிலையென இளக்கிக் கொண்டிருந்தது. வேறுகாடார் அப்பொழுது தான் திடலுக்கு வந்த இளஞ்சிறுவனென துடிப்புக் கொண்டிருந்தார். தமிழ்ச் செல்வனுடன் உரையாடிய பின்னர் திமிலர் மருத்து நிலைக்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தியுடன் இருதியாளிடம் வந்தார். இருதியாளின் வாடிவீட்டில் ஒற்றைத் தீப்பந்தம் மினுங்கிச் சுடர்ந்தது. பனையோலைகளால் வேயப்பட்டு மூங்கில் …
