சர்ப்பத்தின் வால் நுனி
தமிழின் அகமும் புறமுமான கவிதை அடுக்குகளுக்குள் இரண்டின் வெளிகளுக்குள் நுழைந்து மீளும் தன்னிலைகள் ஈழத்தமிழ்க் கவிதைகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. சண்முகம் சிவலிங்கம் அவரது அரசியல் கவிதைகளுக்காக தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அவரது அரசியல் கவிதைகள் நீரின் ஆழத்தொலிக்கும் மெளனமும் அதன் மேலெழும் புயலைப் போன்ற சீற்றமும் கொண்டவை. என்னளவில் அவரது அகக் கவிதைகள் மிக நுட்பமான வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்கள் போன்றவை. பாலியல் வேட்கை, உறவுகள், தனிமை, ஆன்மீகம் என்று பல்வேறு …
