என்ர மயில்க் குஞ்சே!
கம்பஹாவுக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள விளிம்பிலிருக்கும் வெலிசர வைத்தியசாலையில் தம்பிக்கு ஒரு சத்திரசிகிச்சைக்காக நிக்கேக்க தான் ‘விடுதலையில் கவிதை’ தொகுப்பின் கடைசிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தன். நல்ல விதானமான ஆஸ்பத்திரி. எங்கும் சிங்கள நோயாளர்களும் தாதிகளுமே அதிகம். தமிழ் அரிது. கட்டுரையை எழுதச் சரியான இடம். விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறை தொடர்பிலான விமர்சனங்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தன். ஒரு நாளில் பத்து மணித்தியாலத்துக்கு மேல போனைச் சார்ஜ் போட்டுப் …
