22: தூமழை உரைத்தது
செருக்களமேவிய புரவியே நீயுரைமாகளன் ஏந்திய வாள்முனை கண்டனையோமின்னவன் விழிகள் உற்றனையோகூவிடும் புலிக்குரல் கேட்டனையோதேர்ச்சில் சுழல் குருதிக் கூத்தில் தாளக் கால் பூண்டனையோஇன்னிரா இராத்திரியில் சுடர் மீன்கள் விம்மினையோஅழியாட்டு வெஞ்சேற்றில் அழலெனத் திரும்பினையோ வருதோழர் உயிர் நீங்கக் கூற்றன் கயிறாகினையோ என் மாகளன் நெஞ்சம் கேட்டிட நீயுரைஆடுமஞ்சள் நோக்கியிரு விழிகள் உண்டு வேந்தேஉயிர்ப்பிலம் பற்றி நீ சென்ற வழி காற்றாடும் குடசத்தில் உற்று என. பாடினி தூமழைப் பூம்பொழில் தன்னைத் தானே …
