ஓதி எறிந்த சொற்கள்

விளிம்பின் அகமொழி மையத்திற்குள் நகர்கையில் அவை ஓதி எறியும் சொற்களெனவும் சூனியத்தின் மாந்திரீக மொழியெனவும் ஆகும். தன்னைக் கேட்பவரை ஆவாகனம் செய்து வசியத்தின் விழிகள் சொருக நிற்க வைக்கும். அம்மொழியின் உள்ளெரியும் கனலால் அடி முடியற்ற சோதியின் நூறுநூறு தீக்கொழுந்துகளை தலையில் சூடியபடி வாழ்வை ஆடுபவை என். டி. ராஜ்குமாரின் கவிதைகள். அவரது சொற்கள் அதீதமான மனப்பெருக்கின் குழை சேற்றை மிதித்தபடி தன்னைத் தானே சுட்டுக் கொள்ளும் சுடுசிற்பங்களென மொழி …

வைரமுத்துவும் தாஸ்தவேஸ்கியும்: ஒரு கடிதம்

அன்புள்ள கிரி, வாசிப்பு பற்றி நீங்கள் அவ்வப்போது எழுதியவற்றைப், பேசியவற்றை வாசித்தும் கேட்டும் இருக்கிறேன். புத்தக சந்தைகளில் வைரமுத்துவையும் தாஸ்தவெஸ்கியையும் ஒருவர் வாங்கிச்செல்கிறார். நான் அப்படியே அவரைப்பார்த்தபடி நிற்கிறேன். இந்த முரண் எங்கிருந்து வருகிறது. உங்களுடைய வாசிப்பு எப்படி படிப்படியாக விரிந்தது என்பதைத் எழுதலாம் இல்லையா? சமகாலச் சூழலில் இது முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறன். கீர்த்தனா * வணக்கம் கீர்த்தனா, ஒருவர் வைரமுத்துவையும் தஸ்தவேஸ்கியையும் இரண்டு கைகளில் ஏந்திச் …

மூக்குத்தியின் அலையும் சுடர்

நவீன தமிழ்க் கவிதையை அடிவயிற்றிலிருந்து இதயம் வரை நகர்த்திய முன்னோடி சுகுமாரன். மொழி ஒரு ராட்சத ஒக்டோபஸ் போலத் தன் அனைத்துக் கரங்களையும் நீரில் துழாவி அசையக்கூடியது. அதன் இருவிழிகளே மொழியின் பிரக்ஞை. அங்கிருந்து தன்னீருலகைப் பார்க்கும் பிரக்ஞையே சுகுமாரனின் மொழியிருப்பு. சுகுமாரன் என்ற தன்னிலை, தான் உருவானதற்குப் பின் இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கும் மேல் மூன்று தலைமுறைக் கவிஞர்களின் மீது பாதிப்பைச் செலுத்திய மகத்தான ஆளுமை. சுகுமாரன் தன் அகச்சங்கீதத்தால் …

நும்மார்பிற் பாம்பு

தமிழில் சுடுகாட்டின் நிகருலகையும் பக்தியையும் இணைத்த பெருபேய் காரைக்கால் அம்மையார். சிவன் என்ற கடவுளுருவுடன் உண்டாகும் உறவை, பக்தி நிலைப் பாவமாகக் கொள்ளும் வாசிப்பு பெருமளவு உள்ளது. ஆனால் அதன் புறவுலகைச் சாம்பலைப் போலுதிர்த்து உள்நிற்கும் மனநிலையை விரக்தியுடன் மானுட விலக்கமும் கூடிய பெண் மனதிற்கு தெய்வ நம்பிக்கையளிக்கும் அமைதியாகவும் கொள்ள இயலும். தன்னழகுடலைத் தானேயுருக்கி, எலும்பு தோலாகியதன் பின்னரே அவர் பக்தியின் வெளியில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டார். அவர் தன்னைப் …

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்

ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் …

சணற்காட்டில் மஞ்சள் மெளனம்

கற்சிற்பங்களாலான ஒரு மாபெரும் அரண்மனை மொழியென்றால் அதன் ஒவ்வொரு நுண்மையும் வாளிப்பும் திரட்சியின் முழுமையும் கவிதையினால் உண்டாகுவது. பூ வேலைப்பாடுகள், ஆண் பெண் உடல்கள், அதீத மிருகங்கள், பறவைகள், கனவுகள் எல்லாமும் மொழியில் கவிதையால் உறைவிக்கப்படுபவை. யுத்தத்துள் ஈழம், தன் நிலத்திலிருந்து நிலமிலி வரை பலநூறு வரிகளால் சொல்லப்பட்டிருக்கிறது, அதன் ஆன்மா மொழியில் நினைவாலயம் என எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மாந்தரும் அவர்தம் வாழ்வும் செதுக்கிச் செதுக்கி மேலும் வாளிப்படைந்துள்ளது. …

கள்ளவிழ் செண்பகப் பூமலர்

தமிழ் மரபின் பக்திச்சுவை பெண்ணுள்ளத்தின் காதலெனவும் காமமெனவும் திரண்டதன் மகத்தான முதற் குரல் ஆண்டாளுடையது. சேராக் காதலின் ஏக்கமும் உடல் விதிர்விதிர்த்துக் காமம் ஒவ்வொரு மயிர்நுனியிலும் பனியூறுவது போல் மலர்வதும் ஆண்டாளின் மொழியில் கவிதைகளென ஆகிறது. கோயில் திருவிழாக்களில் ஏறும் சாமியும் அதைக் காவும் வாகனமும் போல்வது கவிதை. மொழியே வாகனம். அதிலேறும் சாமியே கலை. ஆண்டாளின் மொழி மார்கழி அதிகாலைகளின் மழைக்குளிரில் காலீரம் உரச, கருங்கற் சிலைகள் சூழத் …

குழந்தை கண்ட மின்னல்

கவிதை மொழியின் கலை. இருட்டில் ஆயிரணக்கான மின்மினிகள் இருளின் கண்களென ஆகி எங்களைப் பார்ப்பது போல் கவிதை வரிகள் அகத்தில் விழித்துக் கொள்வன. அன்றாட வாழ்விலிருந்து மேலெழும் மின்மினிகள் எவ்வளவு உயரம் பறந்திடல் கூடும்? வானமோ பிராகசம் மிக்க விதானம். அதற்கு அப்பாலும் வெளி தான். மானுடரின் எளிய சொற்கள், அவ்விதானத்தையும் அதன் மேற் திறந்துள்ள பிரபஞ்ச வெளிகளையும் அறியும் பொருட்டு, கண்ணை மூடிக் கொண்டு மாபெரும் கலயத்துள் கைதுழாவும் …

விலங்கும் மனிதரும்

மனிதர்கள் என்ற தன்னிலையையும் விலங்குகள் என்ற பிறர்நிலையையும் மனிதர்களாகவே உருவாக்கிக் கொண்டவை. இயற்கையில் அனைத்தும் உயிர்களே. மனிதர் இவ்வுலகையாளும் கட்டுப்படுத்தும் உயிர்களாக வளர்ந்த போதே மனிதர் எதிர் விலங்குகள் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மனிதரைச் சிந்திக்கத் தெரிந்த விலங்குகளாகவே நான் அணுகுகிறேன். விலங்கு என்பதைக் கீழானதாகவோ போதமற்றதோகவோ நான் கருதவில்லை. அவற்றுக்கிருக்கும் உயிரியல்பின் தன்மைகள் சார்ந்து அவையும் மனிதர்கள் போலேயே தமக்கான தனித்தனி வாழ் முறைகளை இந்தக் கிரகத்தில் உருவாக்கியிருக்கின்றன. …

பிறழ்வுகளின் தெய்வம்

ஒரு மரபில் கனவுகளிற்கான தெய்வங்கள் நிகழ்வதைப் போல பிறழ்வுகளுக்கும் தெய்வங்கள் நிகழ்கின்றன. மொழிக்குள் வாழும் கோடிக்கணக்கான மனித மனங்கள் தத்தம் தெய்வங்களை அறிந்து தம்மை அத்தெய்வங்களின் சந்நிதிகளில் ஒப்படைப்பார்கள். கனவுகளின் தெய்வங்கள் கொண்டாட்டமான திருவிழாக்களை மானுடருக்கு அளிப்பவை, அதே நேரம் பிறழ்வுகளின் தெய்வமோ நம்மில் ஒரு பகுதியை வெட்டித் தமக்குப் படையலிட்டாலே தோன்றக் கூடியவை. மானுடரில் பிறழ்வுகள் என்பவை மீறல்கள். தெய்வீகம் என்பதொரு தற்செயல் என்பதைப் போலவே பிறழ்வுகளும். அது …