விடுதலையில் கவிதை
நிலத்திலிருந்து வானென எழுந்த மாபெரும் பழங்காலப் பழுப்பு நிறச் சீலையொன்றில், புள்ளியிலிருந்து, எழுந்து, விரிந்து, பரவி, ஒளிர்ந்து, உதிர்ந்து, வீழும், நிறங்களாலான வரிகளை நான் கற்பனை செய்கிறேன். உதிரமிட்டு நிகழ்ந்த விடுதலைப் போராட்டம் இந்தத் தீவின் ஒவ்வொரு விளிம்பிலும் அலையடித்திருக்கிறது. எத்தனை மகத்தான கனவுகளின் கருப்பை இந்த மண். எத்தனை மகத்தான அழிவின் சாட்சி இந்த மண். ஒரு மண்புழுவின் வால் மிதித்தால் கூட அது சுழன்றசைந்து ஒரு கணம் …
