எனது தம்பி, காலஞ்சென்ற பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சிக்கென உருவாக்கப்பட்ட காட்சியேட்டினை நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்வமுள்ளோர் இணைப்பில் தரவிறக்கி வாசிக்கலாம். இணைப்பு : சிறிதினும் சிறிது ஒளியுள்ள இருட்டு – 1 ஒளியுள்ள இருட்டு – 2
கல்விரல் – குறிப்பு 3
கிடாயில் அமர்ந்திருக்கும் பிசாசொன்று போரின் வடுக்களை மேய்கையில் அலையுறும் பெண் மனம் இந்நாவல். போருக்குப் பின்னான ஒரு நிலத்தில், செல்லடித்து விழுந்து கிடக்கும் ஒரு பனை மரத்தில், தனது கூட்டைத் தொலைத்துவிட்டு தேரிக்காடெங்கும் தேடியலைகிற தூக்கணாங் குருவியொன்று அதன் குஞ்சுகளின் அவலத்தை கழுகுகளுக்கும் பாம்புகளுக்கும்…
எழுநா : 43
ஈழத்து புலத்தில் பண்பாட்டு ஆய்வுகளை பரந்துபட்ட தளத்தில் தொடர்ந்தும் வெளியிடும் எழுநா இதழின் 43 இதழினைத் தற்போது அவர்களின் இணையத்தளத்தில் வாசிக்க முடியும். வரலாறும் தத்துவமும் இலக்கியத்தின் இரண்டு சிறகுகள். ஈழத்து இலக்கியச் சூழல் இது இரண்டும் முயங்காத வெறுவெளி. வரலாற்று ஆய்வுகளுக்கு புனைவு…
தும்பி : 89
தும்பி 89 இதழ் அச்சில் மலர்ந்து எதிர்பார்த்து காத்திருந்த குழந்தைகள் கைகளில் சென்றடைந்துள்ளது. அன்றாட வேலைகள் நிறைய இருக்கும் பெரிய கரடிக்கும் விளையாடத் துடிக்கும் குட்டி கரடிக்கும் இடையே நிகழும் சுவாரசியமான சித்தரிப்புகளை கொண்ட கதை இவ்விதழின் பிரதான ஓவிய கதையாக வெளிவந்துள்ளது. எளிய…
ஆடல் : சிறுகதை
‘ஆடல்’ எனும் என் புதிய சிறுகதை மயிர் இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு :
அகழ் : ஒரு கண்டனம்
காலையிலேயே நண்பரொருவர் அகழில் வெளியாகியிருக்கும் ‘ஆண்பால் உலகு’ என்ற நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் அபிப்பிராயக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார். வாசித்தேன். வழக்கமான நட்சத்திரன் செவ்விந்தியன் வகையறாக் குறிப்பு. தொண்ணூறுகளில் வெளியான வசந்தம் 91 எழுதிய நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் இளம் கவிஞன் மீது இன்றும்…
எனது நிலம், எனது கடல்
யாழ்ப்பாணப் பட்டினத்தின் கோட்டைக்கு அருகில் உள்ள பண்ணைத் தரவைக் கடலில் இலங்கையின் தேசியக் கொடிகள் பல ஊன்றப்பட்டு காற்றிலாடுவதை சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். பட்டினத்தின் கடலில் நுடங்கியும் சீறியும் ஆடும் அக்கொடிகள் என்னை எரிச்சற்படுத்துகின்றன. மோதி நுரைத்து ஆர்த்தெழும் அலைகளே இல்லாத இந்தத்…
‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது
சிவராஜ் அண்ணனை ஒரு முறையாவது நேரில் கண்டு தேம்பத் தேம்பச் சிரித்து கட்டியணைத்து நெஞ்சுடைய தழுவிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். அவர் நம் காலத்தின் பேரறத்தின் ஆன்மா கொள்ளும் தீரா அலைச்சலும் மாபெரும் உத்வேகமும் கொண்டவர். அவரைப் போல முற்றிலும் நேர்மறையான ஆளுமையை…
கல்விரல் – குறிப்பு 2
எழுத்தாளனின் படைப்புகளைப் புரிதலில் வெளியீட்டாளரின் அரசியல் நிலைபாடு ஒரு மறைமுகச் சூழலாக செயல்படும். வெளியீட்டாளர் எந்த வகை நூல்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். எவற்றைத் தவிர்க்கிறார்கள் என்பதன் வழியே அந்தப் படைப்புகளின் அரசியல் ரேகைகள் எவ்வாறு வடிகட்டப்படுகின்றன என்பதை கவனிக்கலாம். படைப்பு தனித்த உருட்டில் நின்றாலும், எழுத்தாளர்…
கல்விரல் – குறிப்பு
கல்லெடுத்தான் குளம் என்ற ஊரில் இருக்கும் மொட்டு என்றழைக்கப்படும், அரும்பி என இயக்கப்பெயரும் கொண்ட துளசி மற்றும் பொற்புதிர் அவளுக்கும் வீட்டுப்பெயர் தங்கம், இன்னொரு புனைப்பெயர் பெற்றி பூர்ஷ்வா அவர்களையும், போர் மற்றும் போருக்கு பிறகான கல்வி நிலையத்தை மையமாக கொண்டது தான் கிரிசாந்…