ஆசிரியர் குறிப்பு: யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்….
பட்டு நூல் – கடிதம்
வணக்கம் கிரி, பட்டுநூல் கதை வாசித்து முடிக்கும்போது நிறைவில் கண்கள் குளமாகிவிட்டன. நீண்ட நாட்களாக எனக்கு இருந்த எங்கள் பண்பாட்டு தனித்துவம் என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. சிலைக்கு கண் திறக்கும் செயல் கலையாக மாறுமிடம், குருபாவா முகைதீன் பற்றிய தரவுகள், கதையில்…
அரவிந்தன் : அஞ்சலி
காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் அரவிந்தன் இன்று காலமாகினார். நட்புடன் பழகுபவர். அவரது திடீர் இழப்பு காலச்சுவட்டுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் அறிவுச்சூழலுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய புன்னகையும் சாந்தமுமான முகம் இனியது. அவருக்கு என் அஞ்சலிகள்.
பட்டு நூல் : சிறுகதை
‘பட்டு நூல்’ எனும் என் புதிய சிறுகதை அம்ருதா ஏப்ரல் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : அம்ருதா ஏப்ரல்
ஒளியிலே தெரிவது : சிறுகதை
நாங்கள் ஒரு கூட்டமாக அந்த மைதானத்தின் கரையிலிருந்த வாகை மரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்தோம். தின்னவேலிச் சந்தைக்கு அருகிலிருந்த பாடசாலையின் மைதானம் அது. வெறும் புழுதி நிலம். உச்சி வெய்யில் நடு மைதானத்தில் உள்ளங்கை போலத் தெளிந்து கிடந்தது. பிரகாஸ் தனது காற்சட்டையின் சிப்பை திறந்து…
தீபச்செல்வன் : ஒரு கண்டனம்
“நேற்றைய நாளில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தமையால் மிகவும் மனவேதனைக்கு உள்ளானேன். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற எனது நூல்கள் இந்தியாவில் இருந்து கப்பலில் பொதியாக வந்தவேளையில், ‘இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பானவை’ என்று காரணம் கூறப்பட்டு இலங்கை சுங்கப்…
சுருட்டை : சிறுகதை
‘சுருட்டை’ எனும் என் புதிய சிறுகதை கனலி இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை தளத்தில் பின்னூட்டமோகவோ அல்லது Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ அனுப்பி வையுங்கள். இணைப்பு : சுருட்டை
சிவராஜ் : அணையா நெருப்பின் சுடர்
19 வயதில் தனக்கு கிடைத்த எல்லாவற்றையும் யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க கொடுத்த மனம் அதன் தன்மை மாறாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. குக்கூ துவங்கிய நாள் தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா செயல்கள் நம்பிக்கைகள் நினைத்து பார்க்க முடியாதளவு மனிதர்கள் நன்மை அடைந்துள்ளனர். ஒரு…
ஞான பீடம் : கண்டனம்
“யோவ் மிலிட்ரி .. வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்தற்கு கண்டனமில்லையா? அகழ் போன்ற பண்ணையார்புரங்களே கண்டனம் வெளியிட்டு விட்டன. தமிழ் இலக்கிய உலகமும் இணையப் பெண்ணியர்களும் ஒரே கோரிக்கைக்காக அணிந்திரண்டு நிற்கும் இது போன்ற அபூர்வமான ஒரு வரலாற்றுத் தருணம் இனி நடக்காது என்று…
சிறிதினும் சிறிது : காட்சியேடு
எனது தம்பி, காலஞ்சென்ற பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சிக்கென உருவாக்கப்பட்ட காட்சியேட்டினை நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்வமுள்ளோர் இணைப்பில் தரவிறக்கி வாசிக்கலாம். இணைப்பு : சிறிதினும் சிறிது ஒளியுள்ள இருட்டு – 1 ஒளியுள்ள இருட்டு – 2