93: குருதி வேலன்
முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை போலத் தோன்றின. கழுத்தின் ஆரங்களில் மென்காலையொளி சங்கிலிக் கதிர்களென மயக்காடியது. எழுந்து பறந்து மீண்டும் கூரையிலேயே அமர்ந்து கொண்டன. குளிர் வீசும் காற்றில் மார்புகள் விறைத்துக் கொள்ள எழுந்து சென்று கோட்டைக்கு அப்பால் விரிந்திருக்கும் …
