கடைசிச் சில்லறையையும் செலவழித்தல்
ஓர் எழுத்தாளனாக உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்? நான் எழுத்தாளனின்றிப் பிறிதொன்றில்லை என அகமுணர்தல் ஏன்? என சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள். ஒரு நாளை எப்படி ஆக்கிக் கொள்கிறேன் என்பதே அவர்களது பலகேள்விகளின் சாராம்சம். ஒரு நாவலாசிரியரோ சிறுகதை எழுத்தாளரோ ஓர் எழுத்தாளராக அன்றாடம் எழுதுவதென்பது அவர்களது வடிவம் சார்ந்த தேவை. ஒரு கவிஞன் எதற்கு இவ்வளவு எழுத வேண்டும் அல்லது அன்றாடம் எழுதித் தான் ஆக வேண்டுமா? …
