அ. முத்துலிங்கம் : நேர்காணல்

ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான அ. முத்துலிங்கம் அவர்களின் இந்த நேர்காணல் அவரது எழுத்துகளைப் பற்றியும் பார்வைகள் பற்றியும் சற்றே விரிவான தகவல்களை அளிக்கக் கூடியது. அவரது எழுத்துகளைப் போலவே நேர்காணலில் அவரது குரல் செறிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்ப நிலை இலக்கிய வாசகர்கள் மற்றும் புதிதாக எழுத வருபவர்கள் அவரின் எழுத்துகளை வாசிக்க இதுவோர் நல்ல தொடக்கம்.

நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் நகைச்சுவை உண்டு. அது ஒரு அம்சம். ஆளுமையின் ஒரு பகுதி. ஒரு திறப்பு. ஒரு கிரியேட்டிவ் தருணம். வீட்டின் ஒரு பக்கம் என்பதைப் போல. தமிழ்நாட்டு இலக்கியவாதிகளில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளையவர்கள் வரை …

வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்

இலக்கியத்தினது முதன்மையான பண்பாட்டுப் பணிகளில் ஒன்று தொகுத்து அளித்தல். ஒவ்வொரு மரபும் காலம் மாற மாறத் தான் தனது உடலைப் பாம்பு செட்டையைக் கழற்றுவது போல இயல்பான ஒன்றாகத் தோலை நீங்கி விட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்ற செட்டையைக் கழற்றிவிட்டு நமது பண்பாடு வேறொரு தோலைத் தனக்கென ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒருமுறை எனது வீட்டில் ஒரு பாம்பு ஆடைப் பெட்டியில் தனது சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுப் …