எங்கிருந்து பார்ப்பது
யாழ்ப்பாணத்தில் நடந்த இமிழ் கதைமலரின் அறிமுக நிகழ்வில் நான் ஆற்றிய உரை இலக்கியச் சூழலில் வாழ்த்தப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. வாழ்த்துகளை ஒருபுறம் வைத்து விட்டு, விமர்சனங்களையும் கேலிகளையும் சில அன்பான பரிந்துரைகளையும் கவனத்தில் எடுக்கலாம். முதன்மையாக எழுந்த சிக்கல் எனது திமிர்த்தனமான தெனாவெட்டான இலக்கிய ஞானம் சொட்டுகின்ற உடல்மொழி. சிலரால் கேலியாகவும் சிலரால் அன்பான முறையில் பணிவற்றதோ அல்லது அவையடக்கமற்றதாகவோ கருதப்படுகிறது. எனது கவிதைகள் சில உள்ளடக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பான …
