எங்கிருந்து பார்ப்பது

யாழ்ப்பாணத்தில் நடந்த இமிழ் கதைமலரின் அறிமுக நிகழ்வில் நான் ஆற்றிய உரை இலக்கியச் சூழலில் வாழ்த்தப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. வாழ்த்துகளை ஒருபுறம் வைத்து விட்டு, விமர்சனங்களையும் கேலிகளையும் சில அன்பான பரிந்துரைகளையும் கவனத்தில் எடுக்கலாம். முதன்மையாக எழுந்த சிக்கல் எனது திமிர்த்தனமான தெனாவெட்டான இலக்கிய ஞானம் சொட்டுகின்ற உடல்மொழி. சிலரால் கேலியாகவும் சிலரால் அன்பான முறையில் பணிவற்றதோ அல்லது அவையடக்கமற்றதாகவோ கருதப்படுகிறது. எனது கவிதைகள் சில உள்ளடக்கப்பட்ட கூட்டுத் தொகுப்பான …

வெட்டுக்கிளிகள், தவளைகள், ராட்சத நத்தைகள்

இலக்கியத்தினது முதன்மையான பண்பாட்டுப் பணிகளில் ஒன்று தொகுத்து அளித்தல். ஒவ்வொரு மரபும் காலம் மாற மாறத் தான் தனது உடலைப் பாம்பு செட்டையைக் கழற்றுவது போல இயல்பான ஒன்றாகத் தோலை நீங்கி விட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்ற செட்டையைக் கழற்றிவிட்டு நமது பண்பாடு வேறொரு தோலைத் தனக்கென ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஒருமுறை எனது வீட்டில் ஒரு பாம்பு ஆடைப் பெட்டியில் தனது சட்டையைக் கழற்றி வைத்துவிட்டுப் …

இமிழ்: அழைப்பு

பிரான்சில் இடம்பெற்ற 51 ஆவது இலக்கியச் சந்திப்பில் வெளியிடப்பட்ட இமிழ்: கதைமலர்த் தொகுப்பின் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நிகழவிருக்கிறது.நானும் நிகழ்வில் பேசுகிறேன். ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து கொள்ளுங்கள். இமிழ் என்றால் ஒலித்தல் என்று பொருள். புறநானூற்றில் இருந்து அச்சொல் இக்கதை மலருக்கு இடப்பட்டிருக்கிறது. கவிதையைத் தேடி வாசித்தேன். போரில் எதிரிகளைக் கொன்ற புலால் மணம் மாறாத தந்தங்களுடைய யானையைப் புலவனுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறான் ஒரு மன்னன். புலவன் அந்த யானையை அஞ்சி …