சிலந்தி வலையில் ஒரு பனித்துளி

  “எல்லா நிச்சயமின்மைகளுக்கும் அப்பால் இந்த வானத்தின் நிரந்தரம் என்னைத் திகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறது” கருணாகரன் இவ்வருடத்திற்கான இயல்விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கவிஞர் கருணாகரனுக்கு கவிதைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின் விடுதலைப் போராட்டத்தின் பெருநீரோட்டத்தில் கருணாகரனளவுக்கு தவிப்பும் கொந்தளிப்புமான கவிஞனின் குரல் இல்லையெனவே நினைக்கிறேன். விடுதலைப் போராட்டம் நெடுகிலும் அதன் மைய விசையோடு சேர்ந்தியங்கிய களத்தில் இரத்தமும் சதையுமாக நின்றியங்கிய இரண்டு முதன்மையான கவிஞர்கள் கருணாகரனும் நிலாந்தனும். ஈழ விடுதலைப் போராட்டம் …