நறுங்காற்றின் இசை

ஈழத்தின் முதலாவது பெண்ணிய அலையின் முக்கியமான கவிஞர்களில் ஊர்வசியும் ஒருவர். 1980 களின் முன்னும் பின்னுமென நிகழ்ந்து வந்த சமூக அசைவுகளின் வழியாவகவும், உருவாகி வந்த பெண் என்ற தன்னிலையின் சிக்கல்களை உரையாடும் வெளியும், பல்வேறு ஆக்கங்களை எழுதும் செயற்படும் காலத்தை உதிக்க வைத்தது. பெண்கள் சந்ததி உற்பத்திச் சாதனம் மட்டுமல்ல. அவர்களது உழைப்புகளிலிருந்து விடுதலையும் சம உரிமைகளும் அகத் தேவைகளும் விரிவாக உரையாடப்படத் தொடங்கிய காலமது. சொல்லாத சேதிகள் …

சூல் கொளல்: 03

1980 காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் முற்போக்கான ஏற்புடமையுடன் மக்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. பெண் கவிஞர்கள் தேச விடுதலையில் தமக்கான பாத்திரத்தை வரித்துக் கொண்டனர். இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் படுகொலைகளும் ஆயுதம் தாங்கி இராணுவத்தை அழிக்கும் ஆவேசத்தை வழங்கியிருந்தன. 1986 இல் பெண்கள் ஆய்வு வட்ட வெளியீடாக வந்த சொல்லாத சேதிகள் தமிழ்ச் சமூகத்திற்குள் உண்டான பெண்ணிய நோக்கிலான விடுதலை …