பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்

ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் …

வீடே முதற் பள்ளிக்கூடம்

கொரோனா நிலமைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் மிகக் குறைவான நாட்களே பள்ளிக் கூடங்கள் இயங்கின. நீண்ட லொக்டவுனுக்குப் பின் பாடசாலை வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. ஆரம்ப வகுப்பு மாணவர்களை எடுத்துக் கொண்டால் முதலாம் வகுப்புப் படிக்க வேண்டிய ஒரு மாணவர் நேரடியான பள்ளி அனுபவம் குறைந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்கிறார். புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிற்கான முழுமையான …

கிணற்றுத் தவளைகளும் சிறகுள்ள மீன்களும்

தன்னம்பிக்கையற்ற, அதிகாரத்திற்கு முன் ஒடுங்கி நிற்கும், சமூகம் பற்றிய அக்கறையென்பது வேறு யாருடையது என்று விளங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை நான் சந்த்தித்திருக்கிறேன். அக்கறையுள்ள மாணவர்களையும் பார்க்கிறேன். அக்கறையுள்ளவர்கள் வாழ்வில் அம்மாற்றத்தை ஏற்படுத்தியதால் ஆழமான பங்களிப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. அத்தகையவர்கள் மிகக் குறைவாக இருக்கின்றனர் என்பதே துயரம். சமூகத்தில் இணைந்து வாழத் தான் கல்வி, தான் அதில் உயர்ந்தவன் என்ற அகங்காரத்தின் மேல் ஏற்றிவைப்பதல்ல. அனைவருக்கும் சுயமரியாதையும் சமதர்மமுள்ள சமூக …

அசையும் நூலகங்களை உருவாக்குதல்

அசையும் நூலகங்களை உருவாக்குதல் நீண்டகாலமாகவே நூலகங்களை உருவாக்குதலும் அவற்றை மக்களின் பயன்பாடுள்ள வெளியாகவும் மாற்றவும் பல்வேறுபட்ட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைக்காலமாக இளம் தலைமுறையினரும் இச் செயற்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். புத்தக சேகரிப்பு நிலையங்களை உருவாக்குதல், புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாகச் சேமித்தல், நூலக உருவாக்கம் சார்ந்து இயங்குகின்ற அமைப்புகளுடன் உரையாடிப் புத்தங்களைப் பெறுதல், பின்னர் அவற்றைக் கொண்டு கிராம மட்ட அல்லது பாடசாலை நூலகங்களை உருவாக்குதல் என்பதாக அவர்களின் …

நிலமீட்புக்கான மக்கள் போராட்டங்கள் – அடைவுகளும் நிலமைகளும்

இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்து தமது நிலங்களைத் தமக்கே தாருங்கள் என்று தமிழ் பேசும் மக்கள் தமது ஜனநாயக வழிப் போராட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்லிய அலைபோலத் தானும் இடைவிடாது மோதிக்கொண்டிருந்தனர். இரண்டாயிரத்துப் பதினைந்து, ஆட்சி மாற்றத்தின் பின்னர், பெருமெடுப்பில் இப்போராட்டங்கள், வெகுசன எழுச்சியாகவும், பிறரையும் உள்ளீர்த்துக் கொண்ட விரிந்த போராட்டங்களாகவும் உருமாறின. முதலில், …

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பதினைந்தாவது நாள் இருளத் தொடங்கி விட்டது. அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மேல் கடந்த ஏழு வருடங்களில் எந்தவொரு ஜனநாயகவழிப் போராட்டங்களும் நீடித்ததில்லை. இந்தப் போராட்டம் அதனை மாற்றி எழுதியிருக்கிறது. இன்றோடு பதினைந்தாவது நாள். தொடரும் உறுதி மட்டும் தான் அந்த மக்களை நோக்கி பலரையும் ஈர்க்கும் வசீகரம். மேலும் அவர்களின் குரலில் உள்ள ஒற்றுமையும் சுரத்தும். முதல் நாள் இருந்ததிலிருந்து இம்மியளவும் மாறாது இன்றும் …

டால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை

ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக் குடிக்கும் உண்டு. தாழ்த்தப்பட்டோருக்கும் உண்டு. டைட்டானிக் படத்தில் இந்த மேட்டுக்குடி பம்மாத்துகளுக்கும் எளிய மக்களின் கொண்டாட்டத்திற்கும் ஒரு அருமையான உதாரணம் உண்டு. கதாநாயகன் ஜாக் கதாநாயகி றோசை காப்பாற்றுவான், அதற்காக அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் மாப்பிள்ளை அவனை …