சுய அழிவு

எது கடைசியில்மிக மிக ஆழமான பள்ளத்தாக்கோஅதில் நான் வீழ்வேன் மீண்டும் எழ முடியாதபடிகாயம்பட்ட உடலுடன்கைகள் உயர்த்தி அழைக்க முடியாத தொலைவில் கைவிடப்படுவேன்கால் நுனிகள் அசையமுடியாதபடி தறையப்படுவேன். விழிகள் ஆகாயத்திற்குத் திறந்தபடிதைக்கப்பட்ட இமைகளுடன் கழுகுகள் கொத்திப் பார்வை மறைவதைசூரியன் அப்படி ஒரே ஒருமுறை என்றெய்க்குமாக அஸ்தமிப்பதைப் பார்ப்பேன். பாவங்களின் சாம்பற் தணலில் உடல் வேக. யாரும் கவனிக்காத வகையில் சிறுகச் சிறுகச் சாவேன்ஒரு அழைப்புப் போல அல்லஒரு பாவத்தைப் போல நிராகரிக்கப்படுவேன். …