கடத்தல் முயற்சி

கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை நேற்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து வான் ஒன்றினுள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் அவர் தப்பித்திருந்தாலும் கடத்தல் முயற்சியின் போது தாக்கப்பட்டும் இருப்பதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சமூகப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து ஊடகவியல் பணியிலும் அதற்கு வெளியிலும் கூடத் துணிச்சலுடன் செயற்படுபவர். அவருடன் சமூகமாக நாம் உடனிருப்பது அறம்.

பேரியற்கையின் குழந்தைகள்

இயற்கையின் இருப்பில் பூமி மானுடருக்கென நிகழ்ந்திருக்கும் அபூர்வம். இப்பொழுது வரை அதுவே உண்மை. நாளை பிரபஞ்சத்தின் இன்னொரு கிளையில் வேறொரு உயிரினம் நம்மிலும் ஆற்றல் மிக்கதாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு பூமியின் ஆற்றல் மிகு உயிரினம் மனிதர்களே. கோடிக்கணக்கான பிற உயிரினங்களுக்கும் வாழிடம் இப்பூமியே. அதன் கருப்பை வினோதமானது. இயற்கையை அறிவியலாகவும் கலையாகவும் அணுகலாம். இரண்டுமே அவசியமான பார்வைகள் என்பது என் எண்ணம். அறிவியல் ஒரு முழுமை நோக்கில் உயிர்களின் …