கடத்தல் முயற்சி
கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை நேற்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து வான் ஒன்றினுள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் அவர் தப்பித்திருந்தாலும் கடத்தல் முயற்சியின் போது தாக்கப்பட்டும் இருப்பதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சமூகப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து ஊடகவியல் பணியிலும் அதற்கு வெளியிலும் கூடத் துணிச்சலுடன் செயற்படுபவர். அவருடன் சமூகமாக நாம் உடனிருப்பது அறம்.
