முதற் குட்டி : மொழிபெயர்ப்பு

“முதற் குட்டி” கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பினை இப்னு அஸ்மத் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். தொடர்ச்சியான அவரது மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு வாழ்த்துகள். * පළමු පැටියා නිවසේ තිබූ සියඵ දේවලින් අම්මාව ගෙන එළියේ තැබුවෙමි අල්ලපු ගෙදරින් කාන්දු වූසාම්බ්‍රාණි දුමේ අග ඈ සිටියාය කොහේදීත් සැමවිට අතහරින්නේ නැතැයිපදිංචි වන කෙනෙකු මෙන් දහසකුත් දහස් වසරක්පළමු පැටියා ඉපදුනු දා පටන් ක්‍රිසාන්ත්සිංහලෙන් …

குழந்தையின் திகைவிழிகள்

இயற்கையுடன் கவிஞரொருவர் நிற்கும் ஒளிப்படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பது, அவரும் அவ் இயற்கையின் பகுதியென உணர்வதன் அறிதலளிக்கும் மகிழ்வு அது. மரத்தடியில் நிற்குமொருவர் அதன் பூவோ காயோ கனியோ வேரோ விழுதோ ஆகுபவர். நீர்வீழ்ச்சியின் அருகில் நிற்பவர் அதன் பெரும் வீழ்வோ உறையும் கற்பாறைகளோ கரையில் எழுந்து நிற்கும் சிறுபுல்லோ ஆகுபவர். கடலுக்கு முன் நிற்கும் கவிஞர் கடலின் அலையெனவோ மினுங்கும் நீலமெனவோ சூரியன் ஒளிந்து கொள்ளும் விரிதடாகமெனவோ ஆகுபவர். …

தடை செய்யப்பட்ட புத்தகம்: இரு மொழிபெயர்ப்புகள்

தடை செய்யப்பட்ட புத்தகம் நண்பா,தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றிநீ அறிந்து வைத்திருந்தால்அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்கவிஞனை நீ சந்தித்திருந்தால்யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்பாட்டிகள், எங்கேனும் இன்னுமிருந்தால்இறந்து போன காதலிகளின் நினைவாக வைத்திருக்கும்பரிசுப் பொருட்கள் எதையாவதுதற்செயலாய் நீ தொட நேர்ந்தால்அலையும் கடலிலிருந்தோ அல்லதுஅக் காட்டிலிருந்தோ, ஏதோ ஒரு வாசனைஉன்னை அதனுள் இழுத்திருந்தால்அழிக்கப்பட்டவர்களின் நினைவாக நீ ஏற்றிய தீபத்தில்யாரேனும் சிறு நீர் …

நானொரு துயரம் நானொரு வாழ்வு: ஒரு மொழிபெயர்ப்பு

நானொரு துயரம் நானொரு வாழ்வு பழமையிலும் பழமையானது துயரம். நானே பெருந் துயரும் மாளாச் சோகமும்நானே புதுயுகத்தின் கண்ணீரும் சாம்பலும்நானே வாழ்வின் பலியும் இரக்கமும். வற்றா அனல் வெளியில் பெருமெளனம்என் இருப்பு. அலறிச் சிறைபடும் ஒவ்வொருபறவையிலும்துடிக்கும் சிறகு நானே அறையும் ஓலமும்அடங்கும் இதயமும்நானே. நானே கைகளில் விலங்கிடப்பட்டவன்நானே தெருக்களில் தனித்திழுபட்டவன்நானே கடவுளரை மன்றாடித் தீர்த்தவன் கைவிடப்பட்டவன். நானே மகா மூர்க்கனும் புனிதனும் ஆனேன்எனது சதையையே உண்டனர் பகிர்ந்தனர்நானே மரணமும் சாட்சியும் …

சூல் கொளல்: 02

இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த பொழுது அதன் சாயல்கள் கொண்ட கவிதை வரிகள் எழுதப்படலாயின. அவை பின்னர் பண்பாட்டில் வேர் கொண்டு தனக்கான படிமங்களை அடைந்தன. உலகெங்கும் அரசின் இராணுவங்கள் …