தீராத கணக்கு – யூமா வாசுகி

யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையை இன்று திரும்பவும் வாசித்தேன். நண்பரொருவர் முகநூலில் பகிர்ந்திருந்ததாக சொன்னார். எத்தனையோ நாள் இந்தக் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் சத்தியாவேசம் என்னை நெக்குருகச் செய்திருக்கிறது. நினைவுகளின் மடிப்பில் அவ்வப்போது எழுந்து வந்து தொந்தரவு செய்வதுண்டு. கடைசி வரிகளை திரும்பத் திரும்ப மனது சொல்லிக் கொண்டேயிருக்கும். கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையின் உச்சமான ஒரு உணர்நிலையின் இன்னொரு வடிவம் இந்தக் கவிதையில் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்ததுண்டு. …

மிடிமை

கவிஞர்கள் இவ்வுலகின் மிடிமைகள் மீது கொள்ளும் கோபமென்பது இல்லாமையின் மீது உருவாகும் அனல். கவி தன் சொற்களில்லாத வேளையில் மாபெரும் இன்மையில் உழல்பவர். இல்லாமை கொன்று போடும் கோபத்தின் எல்லைக்குச் செல்வது பாரதியின் சொற்களிலும் வழிவது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற கோரிக்கையில் என்ன நியாயம் இருக்க முடியும். ஒருவனுக்காக அனைத்தையும் அழிப்பதா! யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையில் உள்ள கனல் பாரதியின் …