மீளச் சொல்லுதல் : 01

நாம் நிகழும் காலத்தில் வெளிவரும் புதிய கவிதையென்பது ஒரு நீண்ட வரலாற்றின் முனை. அது மானுடக் கனவில் வேர்கொண்டு இன்றைக்கும் எதிர்காலத்திற்குமென விரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலம் மிக விரிவான பரப்பு. அதில் ஒரு துண்டை வெட்டி எடுத்து அறிவதென்பது அச் சூழலின் முன்னையும் இன்றையும் இணைப்பது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் அதன் கவிதைக் குரல்களாகவும் தனித்த மனத்தினை நோக்கியும் பேசி வந்த கவிஞர்களில் சிலரை …

தொடக்கம்

குமாரதேவன் வாசகர் வட்டத்தின் தொடக்க நிகழ்வும் அவரது நினைவுப் பகிர்வும் கன்னாதிட்டியில் உள்ள சண்முகம் சைவக் கடையில், அவரது பிறந்த தினமான 10. 12. 2023, மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணி வரை, அவரது உறவினர்கள், கடை ஊழியர்கள், நண்பர்கள் இணைந்து இடம்பெற்றது. குன்றாத ஆர்வம் கொண்ட வாசகரான அவரது நினைவுகளின் பொருட்டு இவ் வட்டம் இயங்கும். வாசகர் வட்டத்தின் முதல் நிகழ்வுத் தொடராக ‘மீளச் சொல்லுதல்’ …