அலைமுறியும் கடற்காற்றில்
தமிழ்க் கவிதைகளுக்குள் ஈழத்தின் நிலவுருவையும் பண்பாட்டு மனங்களில் ஒரு பகுதியையும் பிரதிநிதித்துவம் செய்தவை நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகள். அவரது கூர்மையான கவிதை வரிகள் மெளனமான மொழிவீதியில் ரயர் ஊரிக்கல்லில் எழுப்பும் சன்னமான ஒற்றை ஒலியைப் போல தனித்துவமானவை. நட்சத்திரனின் கவிமனம் 90 களின் பின்னணியில் உள்ள வாழ்க்கைச் சூழலில் இருந்து எழுந்தது. அக்காலகட்ட ஈழத்து வாழ்வின் துல்லியமான சித்திரங்களில் சிலவற்றை நட்சத்திரன் ஆக்கியளித்துள்ளார். அவரது கவிதைகளின் சங்கீதம் குளத்து நீரின் …
