மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை இசைத்தன்மையை உண்டாக்கின. அவருக்கு அறமோ காதலோ, சீற்றமே மொழி. அவரது சொல்முறையினால் ஈர்க்கப்பட்டு உருவாகிய இளம் தலைமுறையினரில் சித்தாந்தனும் தானா விஷ்ணுவும் முக்கியமானவர்கள். அவர்களின் சொற் தேர்வுகளிலும் இணைவுகளிலும் எஸ் போஸ் இன்னமும் புன்னகைத்தபடி …

டக் டிக் டோஸ்

ஈழத்தில் சுயாதீன சினிமாக் கனவுடன் இளைஞர்கள் உருவாக ஆரம்பித்த காலங்களில் நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தேன். 2012 காலகட்டமது. யுத்தம் முடிவடைந்த பின் அதன் கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சிகளும் குறும்பட உருவாக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எனது பள்ளிக்கூடத்திலிருந்தும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள். AAA movies என்ற நிறுவனம், அப்போது பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மறைந்த இயக்குனர் கேசவராஜா அதனை உருவாக்கி இயக்கினார். அப்பொழுது …

தடை செய்யப்பட்ட புத்தகம்: இரு மொழிபெயர்ப்புகள்

தடை செய்யப்பட்ட புத்தகம் நண்பா,தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றிநீ அறிந்து வைத்திருந்தால்அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்கவிஞனை நீ சந்தித்திருந்தால்யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்பாட்டிகள், எங்கேனும் இன்னுமிருந்தால்இறந்து போன காதலிகளின் நினைவாக வைத்திருக்கும்பரிசுப் பொருட்கள் எதையாவதுதற்செயலாய் நீ தொட நேர்ந்தால்அலையும் கடலிலிருந்தோ அல்லதுஅக் காட்டிலிருந்தோ, ஏதோ ஒரு வாசனைஉன்னை அதனுள் இழுத்திருந்தால்அழிக்கப்பட்டவர்களின் நினைவாக நீ ஏற்றிய தீபத்தில்யாரேனும் சிறு நீர் …

என்ர மயில்க் குஞ்சே!

கம்பஹாவுக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள விளிம்பிலிருக்கும் வெலிசர வைத்தியசாலையில் தம்பிக்கு ஒரு சத்திரசிகிச்சைக்காக நிக்கேக்க தான் ‘விடுதலையில் கவிதை’ தொகுப்பின் கடைசிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தன். நல்ல விதானமான ஆஸ்பத்திரி. எங்கும் சிங்கள நோயாளர்களும் தாதிகளுமே அதிகம். தமிழ் அரிது. கட்டுரையை எழுதச் சரியான இடம். விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறை தொடர்பிலான விமர்சனங்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தன். ஒரு நாளில் பத்து மணித்தியாலத்துக்கு மேல போனைச் சார்ஜ் போட்டுப் …

நானொரு துயரம் நானொரு வாழ்வு: ஒரு மொழிபெயர்ப்பு

நானொரு துயரம் நானொரு வாழ்வு பழமையிலும் பழமையானது துயரம். நானே பெருந் துயரும் மாளாச் சோகமும்நானே புதுயுகத்தின் கண்ணீரும் சாம்பலும்நானே வாழ்வின் பலியும் இரக்கமும். வற்றா அனல் வெளியில் பெருமெளனம்என் இருப்பு. அலறிச் சிறைபடும் ஒவ்வொருபறவையிலும்துடிக்கும் சிறகு நானே அறையும் ஓலமும்அடங்கும் இதயமும்நானே. நானே கைகளில் விலங்கிடப்பட்டவன்நானே தெருக்களில் தனித்திழுபட்டவன்நானே கடவுளரை மன்றாடித் தீர்த்தவன் கைவிடப்பட்டவன். நானே மகா மூர்க்கனும் புனிதனும் ஆனேன்எனது சதையையே உண்டனர் பகிர்ந்தனர்நானே மரணமும் சாட்சியும் …

வெற்றிடத்தால் எழும் வீடு

ஈழத்தின் ஆன்மீகத் தொடர்ச்சி சித்தர்களின் சொற்களின் கவிதையாக இன்றும் திகழ்கிறது. யோகர் சுவாமி அமர்ந்திருந்த மரம் இன்னமும் நல்லூர்த் தேர்முட்டியடியில் இருக்கிறது. இளவயதில் நண்பர்களுடன் அவ்விடம் சென்று அமர்வதுண்டு. எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை, எல்லாம் செப்படி வித்தை இவை இந்த நிலத்தின் சித்துச் சொற்கள். அவற்றின் கவித்துவமான அடைவு வாழ்வை வேறொன்றின் தொடர்ச்சியெனத் தன்னை உருவகித்துக் கொள்வது. எனக்கு எந்த மதத்தின் மீதும் கடவுளின் …

நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

1980களின் பின்னர் உருவாகி வந்த பெண்ணிய அலை தமிழ் மொழியின் ஆணதிக்க அடுக்குகளை மெல்ல மெல்லக் கரைத்தபடியிருக்கிறது. அரசியல் நுண்ணுணர்வு மிக்க மொழியைப் பெண்கள் உருவாக்கியபடியே வருகிறார்கள். 1990 களின் காலகட்டத்தில் ஒளவை, சிவரமணி, ஊர்வசி, செல்வி, ஆழியாள் போன்றோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துள் பெண்களின் பாத்திரம் உருக்குலைந்து போக, அதிலிருந்து மாற்றான நோக்குகளைக் கொண்ட உளவமைப்புகளையும் பிரச்சினைகளையும் எழுத்தில் முன் கொணர்ந்தனர். அவை பெரும்போக்கில் எழுந்த தேசிய …

காதலின் முன் பருவம்

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, ஒன்று, அவர்களது இளமைக் காலம் யுத்தத்தின் ஏதோவொரு பகுதி நினைவைக் கொண்டது. அதே நேரம் அது நடந்து கொண்டிருந்த போது அவர்கள் இளையவர்கள். போர் உக்கிரமாக நிகழ்ந்த நிலத்திற்கு வெளியில் வேறொரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. உள்ளிருந்தவர்கள் அதன் மிகுதிகளையும் இறுதியையும் ஞாபகக் கிண்ணங்களில் ஏந்தினர். மற்றையவர்கள் …

மாயா மற்றும் மக்தலேனா சில சிலுவையில் அறையப்பட்டவர்களின் கதைகள்

(குறிப்பு: ஆதி பார்த்திபன், யுத்தத்திற்குப் பின் உருவான புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது பெரும்பாலான புனைவுகள் மற்றும் கவிதைகள் அன்பின் தீராத அலைவை, முன் பருவக் காதலின் குழப்பங்களையும் மனநிலைகளையும் எழுதிச்செல்பவை. இது இவரது ஆரம்பகால எழுத்துகளில் ஒன்று) கடிதம் ஒன்று அன்புள்ள ஜீஸஸ்இன்று உங்களைச் சிலுவையில் அறைந்து முதல் நாள், என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை இருந்தும், நீங்கள் புனிதமானவர் நானோ உங்களுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவள் என்பதால் …