ஆழப் புதைந்திருப்பது

“வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு வகையானவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். சொல்லிச் சொல்லி சுருக்கமாகவே அதன் இழைகளை சொல்லி …

ஈழத்தமிழிலக்கியம் எனுந் தேர்!

சென்னையில் 08.01.2026 தொடக்கம் 21.01.2026 வரை இடம்பெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பலரது புத்தகங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பார்த்தேன். உள்ளபடியே மகிழ்ச்சியான செய்தி. ஓர் இலக்கியச் சூழலின் மையவிசை தொடர்ந்து உரசலில் இருக்க வேண்டியது. ஒவ்வொரு புத்தகமும் எழுத்தாளரின் ஆணவமோ நிறைவோ வெளிப்படும் ஒன்று. கலைக்கு அத்தகைய தன்மைகளே இருப்பதாகத் தோன்றுகிறது. இப்புதிய நூல்கள் மேலும் பலரைச் சீண்டும், இயங்கச் செய்யும், மூர்க்கமாக எதிர்வினையாற்றச் செய்யும். அது …

திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை

எந்தவொரு கலை வெளிப்பாட்டிற்கும் அதனுள் இயங்கும் படைப்பாளியின் ஆளுமையின் கூர்மையான பங்களிப்பிருக்கும். கலையின் ஒருமையும் வெளிப்படும் அழகியலும் அவரின் தனித்த அகத்தின் விந்தையான கலவையால் உண்டாவது. ஓர் ஆளுமையென்பது சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் ஒரு துளி அவரில் செறிந்து கனிகிறது. நாம் இன்று முன்வைக்கும் பண்பாடென்பது அத்தகைய ஆளுமைகளுக்கு ஊடாக வெளிப்படும் ஒரு கனவையே. அவர்களின்றி ஆழ்மனம் வெளிப்பட முடியாது. வெளிப்பட்டு சமூகத்துடன் உரையாடி அதை மாற்ற முடியாது. …

ஒரு தமிழீழ பைலாவும் காவடிச் சிந்தும்

மாவீரர் நாளின் முன்னும் பின்னும் சில நாட்கள் விடுதலைப் புலிகளின் பாடல்களைக் கேட்பது என் பல வருடச் சடங்குகளில் ஒன்று. புலிகளின் பாடல்களுக்கு ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைக் கையாளும் நுட்பமிருக்கிறது. அந்தப் பாடல்களின் வரிகளும் குரலும் அளிக்கும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை ஈழத்தமிழர்களால் தங்கள் உரோமங்களின் நுனிகளால் கூட உணர முடியும். பிரபலமான பாடல்களுக்கு வெளியே இன்று சுற்றில் இருப்பவை வெகு சில பாடல்களே. கல்லறை மேனியர் கண் திறப்பார் முதல் ராஜ …

தும்பி : 87

தும்பி சிறார் இதழின் 87வது பிரதி அச்சில் மலர்ந்து இன்று கைவந்து சேர்ந்திருக்கிறது. சிறந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருக்கு உள்ளுமிருக்கும் குழந்தைமையை பாதுகாக்க உதவும் ஒப்பற்ற படைப்புகள். அவ்வகையில் இவ்விதழ் காலம் காலமாக தங்களுக்கு இடையே மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு கிராமங்களை மையமாக கொண்ட கதையை ஏந்தி வந்துள்ளது. கதையில் வரும் சிறுமி, தன்னை தாக்கிய மற்றொரு கிராமத்து சிறுவனை மீண்டும் தாக்கும் …

இல் / மீள் / எல்லையாக்கம் : திறப்பு

ஒளிப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய ஒளிப்படக் காட்சி ‘இல்/ மீள்/ எல்லையாக்கம்’ மானுடம் சர்வதேச கருத்தரங்கில் இன்று காலை பத்து மணிக்கு துவங்கி வைக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் கைலாசபதி அரங்கிற்கு அருகில் இருக்கும் காட்சிக் கூடத்தில் இடம்பெறவிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்வையிடலாம். தொடர்ச்சியான செயற்பாடுகளின் மூலமும் கலை வெளிப்பாட்டின் மூலமும் தனக்கான பாதையை உண்டாக்கி முன்னகரும் திலக்சனின் இக்காட்சி இந்தத் தீவின் எல்லைகள் பற்றிய அரசியலைப் பேசுவது. (தர்மபாலன் …

சிறிதினும் சிறிது : திறப்பு

பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் ஒளிப்படக் காட்சி நேற்று (14. 10. 2025) மாலை அவரது தந்தையினால் திறந்து வைக்கப்பட்டது. ஒளிப்படக் காட்சி இன்றும் நாளையும் (15, 16) காலை 10 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பஸ்ரியன் சந்திக்கு அருகில் உள்ள ‘கலம்’ இல் இடம்பெறும். ஒளிப்படங்கள் : பிரிந்தா, குமணன்

தன்னறம் இலக்கிய விருது : 2025

“மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு. பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு. இதனால்தான், ‘என்னுடைய மொழியில்…’ என்று நாம் சொல்கிறோம். தொகுத்துச் சொல்வதென்றால், மொழியாக்கம் என்பது, ஒரு வார்த்தை எப்படியான அர்த்தங்களைக் கொண்டிருக்க முடியும் என்று துருவியகழும் செயலாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு வார்த்தையின், ஒரு வாக்கியத்தின், ‘தொனி’யைப் பிடிப்பதற்கு நாம் வார்த்தையை, வாக்கியத்தைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதாவது, மூலப்பிரதி அதன் …

சிறிதினும் சிறிது : நிதிக் கோரிக்கை

எந்தவொரு கலை நிகழ்வும் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புடன் நிகழ வேண்டும் என்பது என் திண்ணமான நிலைப்பாடு. ஒவ்வொரு நிகழ்விலும் சமூகம் பங்களிக்கும் பொழுது அது பிறிதொரு அர்த்தம் கொண்டதாக ஆகி விடும். ஒரு கோயில் திருவிழாவைப் போலவோ ஒரு சடங்கைப் போலவோ ஒரு போராட்டத்தைப் போலவோ அது நிகழ வேண்டியது. எனது தம்பி பிரசாந்தின் ஒளிப்படக் காட்சியான ‘சிறிதினும் சிறிது’ ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. Catalogue வேலைகள் வடிவமைப்பு நிலையில் …

அஞ்சலி : நன்மிளிர்

கவிஞரும் எழுத்தாளருமான நண்பர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது மகன் 26 நாட்கள் பிறந்திருந்த வேளை தொற்று ஒன்றினால் இரண்டு நாட்களுக்கு முன்னர் (21.10.2025) அன்று மரணமடைந்திருக்கிறார். அவருக்கு நன்மிளிர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இனிய பிஞ்சு மகன் உலகை பார்க்க முன்னரே பிரிந்து விட்டான். அஞ்சலிகள் மகனே. புத்திர சோகம் எந்த வயதிலும் கொடியது. உடலின் அனைத்து துயரங்களும் இன்பங்களும் வற்றிவிட்ட பிறகு உடலின் அனைத்து கண்ணீரும் புன்னகையும் வற்றி …