90: சுவடிகை
கண் மடல்கள் நீரலை போல அமைந்தெழ நிலவையின் மஞ்சத்தில் லீலியா துயிலில் இருந்தாள். தானகி நிலவையைச் சேய் போல அணைத்துக் கொண்டு துயின்றிருந்தாள். தென்னகத்திலிருந்து வந்த பெண் மொழிபெயர்ப்பாளினி சுவடிகை இருக்கை மஞ்சமொன்றில் தலையணையைப் பற்றிக் கொண்டு துயில் மயக்குக் கலைய எழுவதும் நினைவுகள் பின்னாலென இழுக்கச் சாய்வதுமாக உழன்று கொண்டிருந்தாள். முற்புலரியில் அரண்மனை நோக்கித் திரும்பிய லீலியாவின் புரவியில் அவளின் பின்னே குரங்குக் குட்டியென அணைத்துக் கொண்டு சுவடிகை …
