செயற்களம் புகுவோருக்கு
ஒவ்வொரு சமூகப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் அததற்கான தனித்தன்மையான அணுகுமுறைகளைக் கோரக் கூடியவை. அப்பிரச்சினைகளைக் கையாளும் தனிமனிதர்களோ சமூக மட்ட அமைப்புகளோ யாரும் எவை குறித்தும் முழுமையான அறிதல்களோ பார்வைகளோ தீர்வுகளோ அறிந்தவர்களல்ல. தொடக்கத்தில் அச் சிக்கலும் அதைத் தீர்க்க வேண்டும் என்ற உந்துதலும் அவர்களிடமிருக்கும். எந்தவொரு செயற் தொடக்கமும் நாம் அவதானிக்கும் அன்றாடத்திலிருந்தே நம்முள் விதையென விழுகின்றன. நாம் அவற்றால் அலைக்கழிகிறோம். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கின்றோம். ஆனால் செயல்படுதலென்பது …
