113: ஒருகணம் : 02

அக்கணத்தில் விழி திறந்திட்ட உருக்கு வாள் முனை போன்ற விழிகளால் சுழல் விழி இளம் பாணனை எண்ணிக் கொண்டாள். அவனது இளம் புரவிக் குழலும் சிறுவனின் அகங்காரம் கொண்ட விழிமணிகளும் அகன்ற மார்புகளில் தேக்கின் மதர்ப்பும் கூடியிருந்தது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அலைந்தபடி அங்கு இங்கென்றில்லாது நாகங்கள் தன்னை நோக்கிக் கல்லுறை பிரிந்து எழ முயற்சிப்பவை போல அசைகின்றன என மயக்குக் கொண்டாள். முன்னை நாளிரவில் அவள் நோக்கிய ஆணுடல்கள் துண்டு …

112: ஒருகணம்

விண்ணென்பது இளங் கருமையின் மாபெரும் வதனமெனத் திரண்டிருந்தது. சாம்பலின் கருமை தலைப்பட்டினத்தின் மீது அகண்ட காளான்களின் மலைக் குவைகளெனக் கவிழ்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. இளமழையின் தூவல்கள் வெளிநோக்கி நிலைத்திருக்கும் இளங் காதலியின் விழிமயக்கென எண்ண இயலாத தழைவில் விழுந்து கொண்டிருந்தது. முகம் வெண்ணிறமாகி மேனி பொன்மணலென கத்திகளின் அடுக்குத் தோலெனச் சிறகை விரித்துப் பருந்தொன்று மேகத்தில் மெல்லிய காற்று வட்டத்தை உண்டாக்கி அப்பாலிருந்த சூரியனின் துண்டொளியில் மினுங்கிக் கொண்டு இறங்கியது. …

111: மெய்த்தோழன் : 02

வலைக்குள் வலையென நுண்ணியும் விரிந்தும் அகன்றும் உருவாகிய புலிகளின் குழு முற்றொருமை கொண்டு பிற குழுக்களைத் தாக்கி அழித்து அரசாணை கொண்டெழுந்த போது அரசு சூழ்தலின் தலைமைப் பொறுப்பினை தமிழ்ச்செல்வனிடமே காலம் கையளித்தது. சூர்ப்பனகர் அவர்களது மதியூகியர்களில் முதன்மையானவராக இருந்தார். எதை எங்கு எதன் பொருட்டு எங்கனம் உரைக்க வேண்டுமோ எச் சொல் எக்காலத்தில் கனிந்து கனியாக வேண்டுமோ அதை அவ்வாறே விதைத்து அறுக்கும் வல்லமை கொண்டவரென அவரை மதியூகிகள் …

110: மெய்த்தோழன்

அரண்மனை வாயில் கோபுரத்தில் நின்ற இளம் புலிவீரர்கள் இளமழைக்கு ஒடுங்கி கோபுர அறைகளில் ஒதுங்கியிருந்தனர். மூங்கில் ஏணியால் மேலேறிய தமிழ்ச் செல்வனைக் கண்ட போது பதைபதைத்து தம் இடங்களுக்கு மீண்டு கொண்டிருக்க கையால் சைகை காட்டி அறைகளுக்குச் செல்லும்படி கூறினான் தமிழ்ச்செல்வன். பிடிகோலை மீளவும் ஊன்றிக் கொண்டு மெல்லிய நடையுடன் உடலை ஒருக்கிக் கொண்டான். பச்சை மேலாடை காற்றில் பறந்து கொண்டிருந்தது. இளவெண் இடையாடை அணிந்திருந்தான். கூத்தனொருவன் அம்பலம் ஏறியதைப் …

109: அன்னைக்கடல் : 02

ஆழியை விழிகளால் அணைத்தபடியிருந்த இளநீலனின் அருகில் அவனது முதல் தனுசு பாணங்களற்றுத் தனித்திருந்தது. குழல் காற்றில் மெல்ல விசிறும் மழையில் இலைத்தழைப்புகளென ஆடின. இளஞ் செவிகளில் குண்டலங்கள் மொட்டு உலகுகளெனச் சுழன்று கொண்டிருந்தன. இடையாடையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு கால்களை ஆமைத் தலையென மண்ணுள் புதைத்தபடி எல்லையற்ற ஆகாயத்தில் ஒளிப்பதக்கமென மினுங்கிக் கொண்டிருந்த சூரியனை நோக்கிக் கொண்டிருந்தான். சூரியனை நோக்குவதில் அவன் இணையற்ற உவகை கொண்டிருப்பதை அன்னை அறிவாள். …

108: அன்னைக்கடல்

மா என்று கடல் இரைந்து அழைத்துத் திரும்பும் ஓராயிரம் ஒலிகளைப் புலரி முதல் கேட்டபடி இளமழையின் சின்னக் காலடிகள் கரைமணலில் நடப்பதை ஓய்வேயில்லாமல் திண்ணையில் சாய்ந்தபடி நோக்கியிருந்தார் நீலனின் அன்னை உமையம்மாள். ஒவ்வொரு மா வும் ஒரு மழலையின் அழைப்பு என செவிகளில் குளிர் விரல்களால் தொட்டளைய உதிருடல் போலிருந்த முதிர்தேகம் மெய்ப்புக்கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இளவயது முதலே நீலக்கடலை புலரியில் நோக்கியிருப்பது அவளின் வழக்கம். “அலை …

107: இளமழை விளையாட்டு : 02

சாலினியின் சிறுசெவியை முயலின் காதெனப் பற்றியபடி ஏசிக் கொண்டு அவளைத் திண்ணை நோக்கி இழுத்துச் சென்றாள் இளந்தாய். முதுபெண்டிர் சாலினிக்காகப் பரிந்து பேசினர். அவள் இளையவள். குறும்பினி அவளை விட்டுவிடு எனச் சொல்லி சாலினியின் சிணுங்கல் முகத்தை நோக்கினர். அகம் கரைப்பது போல முகம் கொண்டு சிணுங்கி அழுகை வர பிடிபட்டு அவமானம் கொண்டவள் போல அன்னையுடன் இழுபட்டுச் சென்றாள். திண்ணையில் அமர்ந்து என்ன செய்வதென அறியாது முகம் கோணி …

106: இளமழை விளையாட்டு

நீலனின் பின்னுருவைக் கண்டு அவன் உடலில் எழும் வனப்பை நோக்கிக் கொண்டே சுவடிகையின் சடசடவென வெடிக்கும் வினாக்களுக்கு தலையை அசைத்தபடி சீரான தாள அடிகளுடன் நடந்தாள் நிலவை. இளமழை அனைவரின் மீதும் தழைந்து இறங்கி ஒட்டிக்கொண்டிருந்தது. சத்தகன் நீலனுக்கு வேடிக்கை சொல்லி உரக்கச் சிரித்துக் கொண்டு உடன் சென்றான். வேறுகாடாரும் இளம் பாணனும் மருத்துவக் குடில் வாயிலில் நின்றபடி சுடர் மீனனுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். இளம் பாணன் நிலவையின் பின்னுருவையும் …

105: மடப்பெண்ணே : 03

“தாகத்தை அறியவும் கற்கவும் பயிலவும் மேலும் கற்று முற்றறிந்து அமையவும் இயலாதவர் விடாயை அனுபவிக்கவும் தீர்த்துக் கொள்ளவும் நீங்கவும் இயலாது. மானுடர் தங்கள் விழைவுகளின் ஊற்றுமுகங்களை கண்டடைதலே பாதையினைத் தேரும் முதல் நிகழ்வு. அடுத்து அதைச் சொல்லில் கற்க வேண்டும். மானுட விழைவுகள் அனைத்தைக் குறித்தும் சொற்களும் தத்துவங்களும் காவியங்களும் எழுந்திருக்கின்றன. அவை அறியாத கடலில் சிறுபடகில் செல்லும் தனித்த விடாய் கொண்டோருக்கான விண்மீன் வரைபடங்கள். அவற்றைக் கொண்டு ஆழியையும் …

104: மடப்பெண்ணே : 02

பெரும் புற்காட்டிடை புலி மறைவதென பொன்னனின் நோக்கிலிருந்து முத்தினி அகல விழியருகில் குவிந்து மிதக்கும் மின்மினிப் பூச்சிகளென ஒளியுவகை கொண்டு எழுந்து நெருங்கி அவனது முகம் நோக்கினாள் செழியை. எப்பொழுதும் பரபரக்கும் செழியையின் விழிகள் இப்பொழுது ஒருகணத்தை முழுதளப்பதற்கு ஒரு முழுப் புடவியை விழிகளில் கட்டி இழுப்பதைப் போல ஒவ்வொரு அணுக்கணுவிடையும் பிந்தினாள். ஒரு முழுப்புடவி காற்றைப் போல எடை கொண்டதெனவும் கல்லாலானவை எனக் கற்பனையிலும் எண்ணிக் கொண்டாள். அவனது …