53: ஐம்புதல்வர்
“எண்ணுந் தோறும் நழுவும் ஒன்று கலையில் அமைந்திருக்கிறது இளையவரே. ஆன்மீகத்திலும் அவ்வண்ணமே. ஞானம் அடைய எண்ணியிருப்பதும் கூட ஒரு தடையாக அமையலாம். வழிகள் பிரிந்து ஆயிரம் திரிகளாய் ஞானப் பாதை சுடர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியை அறிவிக்கிறது. ஞானமென்பது புடவியை வெல்வதல்ல. தன்னை வெல்வது மட்டுமே ஆகும். தன்னைத் தான் வெல்லும் புடவியெனவும் சொல்லிக் கொள்ளலாம். அதில் வென்றமைபவர் ஒரேகணத்தில் மலரெனவும் வாளெனவும் தோன்றக் கூடியவர். என்னுடைய …
