மொழியின் திகைப்பு

“Bro.. நீங்க சிறுகதை எழுத்தாளரா? த‌மி‌ழ் வெண்பா எழுதிய அனுபவம் உண்டு. இருப்பினும் உங்கள் கவிதைகள் சிறிது புரிய /புரியாத போல் உள்ளது…i think I need to have a brief introduction to understand” என்றொரு கேள்வியை புதிய நண்பரொருவர் அனுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கான பதிலை இளம் வாசகர்களுக்குமானதாக விரித்து இக்குறிப்பை எழுதுகிறேன். * என்னை எழுத்தாளர் எனும் வகையில் சுட்டலாம். கவிதை, புனைவெழுத்துகள், இலக்கிய விமர்சனம், …

பன்றியுமாய் அன்னமுமாய் சோதியுமாய்

  தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்பல்லவி எனும் இதழ் தனது நாற்பதாவது இதழினை ஈழத்துச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அவ்விதழில் எழுத்தாளர் கருணாகரனின் நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. போருக்கு பிந்தைய வாழ்க்கை, இலக்கியச் சூழல் பற்றியே கேள்விகள் மையங் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியில் கருணாகரன் இப்படி பதிலளிக்கிறார், “இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேச விளைகிறார்கள். குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும் …

சலாங்கையா – கடிதம்

அன்புடையீர், வணக்கம் “தளம்” இதழை அதன் ஆசிரியர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். “உங்கள் அண்ணனைப் பற்றி ஒரு சிறுகதை,வந்திருக்கிறது படித்துப் பாருங்கள்” என்று போன் செய்திருந்தார். நான் தெளிவத்தையின் தம்பி. தமிழ்நாட்டில் இருக்கின்றேன். அண்ணனின் சிறுகதைகளை நிறைய வாசித்திருப்பீர்கள். முதற்கண் அதற்கு நன்றி. அண்ணனுடைய அனைத்து சிறுகதைகளும் 59 ம் ஒரே நூலாக தொகுத்து வெளிவந்திருக்கிறது. தாங்கள் எங்கே இருக்கிறீர்கள். வெளிநாட்டிலா. சத்துரு கொன்றான் மட்டகளப்பில் இருக்கிறது என்று நினைக்கிறேன். …

மலர்தலின் எந்த அமைதியுமின்றி

தர்மு பிரசாத்திடம் சுகுமாரனின் கவிதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு அவதானத்தைச் சொன்னேன். இன்றளவும் சுகுமாரனின் முதற் கவிதை நூலான கோடை காலக் குறிப்புகள் தமிழ் வாசிப்புச் சூழலால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது. அவர் அந்தத் தொகுதியின் கவிதைகளில் வெளிப்பட்ட சீற்றமும் கொந்தளிப்புமான இளங் கவியாகவே இன்றளவும் முதன்மையாக மதிக்கப்படுகிறார். அது ஒரு வகையில் எதிர்மறையானது. அவரது நீண்ட நெடிய இன்றளவான எழுத்துகள் மீது மீண்டும் சிறிய வட்டமே …

தீராத கணக்கு – யூமா வாசுகி

யூமா வாசுகியின் தீராத கணக்கு கவிதையை இன்று திரும்பவும் வாசித்தேன். நண்பரொருவர் முகநூலில் பகிர்ந்திருந்ததாக சொன்னார். எத்தனையோ நாள் இந்தக் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் சத்தியாவேசம் என்னை நெக்குருகச் செய்திருக்கிறது. நினைவுகளின் மடிப்பில் அவ்வப்போது எழுந்து வந்து தொந்தரவு செய்வதுண்டு. கடைசி வரிகளை திரும்பத் திரும்ப மனது சொல்லிக் கொண்டேயிருக்கும். கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் கதையின் உச்சமான ஒரு உணர்நிலையின் இன்னொரு வடிவம் இந்தக் கவிதையில் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்ததுண்டு. …

பித்தம் தெளிய வைத்தல்

நண்பரொருவர் கீழ்க்கண்ட பதிவின் பகுதியை அனுப்பியிருந்தார். “இதையேன் இவ்வளவு விபரமாகச் சொல்கின்றேன் என்றால், நேற்று நண்பர் ஒருவரோடு பேசும்போது இன்று ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் இருந்து வரும் ‘பாவனை’ எழுத்துப் படைப்புக்கள் பற்றிய பேச்சு வந்தது. நண்பர் இன்னொரு தனது நண்பரிடம், அவரில் சமகாலத்தில் எழுதும் படைப்பாளியின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரிகின்றதே என்றபோது, தனது ‘குருவின்’ பாதிப்பு படைப்பில் இருப்பது தனக்குப் பெருமைதான் என்று மற்றவர் சொல்லியிருக்கின்றார். நான் சொன்னேன், காலமான …

கோயிலில் வைக்காத மல்லிகை

“Dear children sincerely” எனும் நாடக ஆற்றுகை இன்று திருமறைக் கலாமன்றத்தில் stages நாடகக் குழுவினரால் நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்த நாடகம் இலங்கையின் ஏழு தசாப்தங்களில் நிகழ்ந்த அரசியல் திருப்பங்களினூடாக சிறுவர்களை நோக்கி வரலாற்றை பேசுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் அனுபவமாக அதன் நடிகர்கள், ஒளியமைப்புகள், கதையை வெளிப்படுத்த கையாண்ட உத்திகள் என்பன சிறப்பாக இருந்தது.  மையச்சிக்கலாக எனக்கு இருந்தது தமிழ் மக்களின் பிரச்சனையை எவ்வளவு எளிமையாக காட்சிப்படுத்தியிருந்தனர் என்பது தான். அரசியலை …

மூதன்னையின் இரண்டாம் தொடுகை

என் மூன்று ஆசிரியர்களின் ஆசி பெற்ற அந்த நாள் வியாச குரு பூர்ணிமா என அடுத்த நாள் யதார்த்தன் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஒவ்வொரு வருடமும் வரும் வைகாசி முழு நிலவு நாளை வியாசரின் பிறந்த நாளாக, குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் வெண்முரசு நிறைவடைந்த பின்னர் ஆண்டு தோறும் வெண்முரசு நாளாகாவும் அது கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய ஒரு நாளில் இத்தனை ஆசிகள் கிடைத்திருப்பது முதலில் மகிழ்ச்சியாகவும் இப்பொழுது பொறுப்பாகவும் …

மூன்று ஆசிரியர்கள்

இந்த நாள் போல ஒன்று எனக்குத் திரும்ப நிகழ முடியாது என்று தோன்றுகிறது. அரிதாகவே தன் கல்லுதட்டை இளக்கும் ஒரு தெய்வம் என்னைத் திரும்பிக் கூர்ந்து பார்த்துப் புன்னகைத்தது போல ஒரு நாள். காலையில் எழுந்த போது வட்ஸ் அப்பில் தர்மு பிரசாத் ஒரு லின்கை அனுப்பியிருந்தார். ஜெயமோகன் தளத்தில் என்னைப் பற்றிய தமிழ் விக்கி குறிப்பை பகிர்ந்திருந்தார். ‘கிரிசாந்’ என்கிற பிரகிருதி தமிழ் இலக்கிய உலகில் வாழ்கிறான் என …

கனவாகவும் காவியமாகவும்

இம்மாத (ஏப்ரல்) நீலம் இதழில் வந்துள்ள ‘பெருங்காவியம்’ சிறுகதை எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது சிறுகதை அல்ல. ஏழு கன்னிமார்கள் என்னும் தொன்மத்தை மறு உயிர்ப்புச் செய்து காட்டியுள்ள அப்புனைவு கவித்துவமான மொழியுடன் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஈழத்தனி நாட்டுக்கான போர்க்காட்சிகளின் சில கீறல்களையும் மனவோட்டங்களையும் உருவகமாக எழுதிக் காட்டியுள்ள அப்பனுவல், ஈழப்போரில் நடந்த நிகழ்வுகளும் அழிவுகளும் தன்னையழித்துக்கொண்ட வீரதீரங்களும் தியாகங்களும் குமுறல்களும் பகையழித்த கொலைகளும் பெருங்கனவாகிப் போனது …