98: ஊர்தி : 02

வேறுகாடார் நிமிர்ந்து கொண்டு உலகளந்தோனின் வருகையை நோக்கிக் கொண்டிருந்தார். “வருக. இளையோனே. பணிகள் ஒருக்கியாயிற்றா” என்றார். “நான் சென்ற பணிகள் எப்போது முற்றுறாமல் போயிற்று மூத்தவரே. அனைத்தும் சிறப்பாய் நிகழ்ந்தன. களியாடி உங்கள் இளமை மீண்டிருக்கிறது போல முகம் பிரகாசமாக இருக்கிறது” எனச் சொல்லிச் சிரித்தான். வேறுகாடார் புன்னகையுடன் “நீயில்லாத களி அற்புதமாய்த் தானிருக்கும் இளையோனே” என்றார். உலகளந்தோன் உறுமல் போலச் சிரித்துக் கொண்டு தன் வலக்கையைத் தூணில் ஊன்றி …

97: ஊர்தி

“எனது காமம் உடலில் நிகழ்வதில்லை பொன்னா. உடலை ஊர்தியாக்கிக் கற்பனையிலேயே என்னைக் கண்டு கொள்கிறேன். நான் முற்று விழையும் ஆணென்று ஒருவரைப் புடவியால் ஆக்கியளிக்க ஒண்ணாது. நான் என்ற இருப்பிலிருந்து மேனி கடந்து எழும் இருத்தல் நான். என்னை நீ உன்னுடையவள் ஆக்க இயலாது. பல பருவங்களுக்கு ஒருமுறை விண்ணில் தோன்றும் எரிவிண்மீன் போன்றது என் இருப்பு. என்னை நான் யாரென்று கண்டெடுத்து விட்டேன். இங்கிருந்து திரும்பி நான் என் …

96: தணல் மலர் : 02

“என்னவாயிற்று இளையோரே. களி காலத்திலும் கலைப் பூசல்கள் தேவையா” என்றார் வேறுகாடார். இளம் பாணன் எழுந்து சென்று சாளரத்தின் அருகிருந்த மரப்பெட்டியில் சாய்ந்து கொண்டு தீயிலைத் துதியை உறிஞ்சினான். “கலைப் பூசல்களுக்குப் பருவமோ பொழுதோ இல்லை கிழவரே. இது எளிமையான பூசல் தான். நான் சிற்பிகளைக் குறைத்துச் சொல்வதாக எண்ணிவிட்டார். ஒவ்வொரு கலை வடிவமும் அதற்குண்டான பிறிதொரு ஆழ்பார்வையைக் கொண்டிருக்கும். மானுட அகங்கள் எதனுடன் தன்னை இணைத்துக் கொள்ளுமென்பது சர்வ …

95: தணல் மலர்

விழைவுகளில் நான் பெருங்களி எனச் சொல்லி குயில் போலச் சிரித்த விருபாசிகையில் புலரியின் பனி மேகத்தில் ஊறும் நீரெனத் திரண்டிருந்தது. கூந்தலின் இழைகள் மஞ்சம் போல மலர்கள் உதிர்ந்து தூங்கியது. இரவு எழுந்து மனை சென்று நடுநிசியின் பின்னர் திரும்பியிருந்தாள். தேகத்தில் களிமினுக்கு ஏறி முகத்தில் பிரகாசம் கூடியிருந்தாள். வேறுகாடருடனான பித்தாக்கும் புணர்ச்சிக்குப் பின் அவளது உடலில் ஒருமை கூடியிருந்தது. புலரி வரை பொன்னனுடன் சொல்லாடியும் துயின்றும் அயர்ந்திருந்தாள். வனப்பாதையின் …

94: பாற்கடலிகள்

முதிய மருதமரங்கள் கலகலத்து வீசிய புலரிக் காற்று முதுகிலறைய புலிகளின் இளம் வீரர்கள் குழுவொன்று வனவிளிம்பைக் கடந்து பட்டினத்தை நோக்கிய நீண்ட பெருஞ்சாலையில் நுழைந்தது. ஆதவனின் ஒளிப்பற்கள் முதுகில் மழலைக் கடியென வீழ்ந்து கொண்டிருந்தது. வற்றியுலரும் ஆறெனக் குடிகளின் பெருக்கு அடங்கியிருந்தது. புலரியின் இனிய பறவையோசைகள் புதர்களிலிருந்து மந்திரங்களென ஒலித்து மயக்கு ஏற்றின. சோதியன் குளிருக்கு மேனி நிமிர்த்தி புரவியின் சீர் ஓட்டத்தில் தாவியெழுந்து அமைந்து கொண்டான். அவனுக்கு முன்னால் …

93: குருதி வேலன்

முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை போலத் தோன்றின. கழுத்தின் ஆரங்களில் மென்காலையொளி சங்கிலிக் கதிர்களென மயக்காடியது. எழுந்து பறந்து மீண்டும் கூரையிலேயே அமர்ந்து கொண்டன. குளிர் வீசும் காற்றில் மார்புகள் விறைத்துக் கொள்ள எழுந்து சென்று கோட்டைக்கு அப்பால் விரிந்திருக்கும் …

92: மணநாள்

பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே “என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று சுற்றிப் பறக்கிறது. உனது நெடுங்காலத் தனிமையை நான் விரும்பியிருக்கவில்லை என்பது மெய்தான். எனிலும் இவளில் உள்ள எதுவோ ஒன்று உன் அகத்தை இட்டு நிரப்புமென்ற எண்ணம் நீர்க்குடத்தில் காற்றலைக்கும் ததும்பலென நிறைவு தாளாது துள்ளுகிறது” …

91: குழவி நாகங்கள்

உசை “நீலா நீலா” என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். தானகியின் விழிகள் மஞ்சத்தறையைச் சுழன்று நோக்கியது. மழலைகள் விளையாடிய மனையெனக் குலைந்த மஞ்சத்தறையை உதட்டில் சிரிப்புச் சுழியெழ நோக்கியவள் லீலியாவையும் சுவடிகையையும் நோக்கி அவர்கள் எப்போது வந்தார்கள் என நினைவைப் புரட்டிச் சலித்தபடி எழுந்தாள். …

90: சுவடிகை

கண் மடல்கள் நீரலை போல அமைந்தெழ நிலவையின் மஞ்சத்தில் லீலியா துயிலில் இருந்தாள். தானகி நிலவையைச் சேய் போல அணைத்துக் கொண்டு துயின்றிருந்தாள். தென்னகத்திலிருந்து வந்த பெண் மொழிபெயர்ப்பாளினி சுவடிகை இருக்கை மஞ்சமொன்றில் தலையணையைப் பற்றிக் கொண்டு துயில் மயக்குக் கலைய எழுவதும் நினைவுகள் பின்னாலென இழுக்கச் சாய்வதுமாக உழன்று கொண்டிருந்தாள். முற்புலரியில் அரண்மனை நோக்கித் திரும்பிய லீலியாவின் புரவியில் அவளின் பின்னே குரங்குக் குட்டியென அணைத்துக் கொண்டு சுவடிகை …

89: களியிலாடு மயில்

அருள்வதும் மருள்வதும் பெண்ணின் இயற்கை. வளர்வதும் பொலிவதும் போல. தானகி தன் நினைவுகளின் இனிமைகள் அனைத்தும் நிலவையின் உடனிருத்தலில் எங்கனம் பூத்து மகிழ்ந்தன என எண்ணிக் கொண்டாள். அரசியினருகில் துயிலும் தோழியென்றாகி வாழ்பவள். சொல்லிலும் மெளனத்திலும் மெல்லிய அசைவிலும் கூட அவளை அறிந்தவள். நிலவை பெண் கூர் கொண்ட உச்சம். விழைவும் அறிவும் ஞானமும் திரண்ட பேருரு. காலத்தின் சங்கிலி. வாழ்வின் திகைப்பு. முதல் நாள் களியிரவில் மந்தணமாய்க் களி …