98: ஊர்தி : 02
வேறுகாடார் நிமிர்ந்து கொண்டு உலகளந்தோனின் வருகையை நோக்கிக் கொண்டிருந்தார். “வருக. இளையோனே. பணிகள் ஒருக்கியாயிற்றா” என்றார். “நான் சென்ற பணிகள் எப்போது முற்றுறாமல் போயிற்று மூத்தவரே. அனைத்தும் சிறப்பாய் நிகழ்ந்தன. களியாடி உங்கள் இளமை மீண்டிருக்கிறது போல முகம் பிரகாசமாக இருக்கிறது” எனச் சொல்லிச் சிரித்தான். வேறுகாடார் புன்னகையுடன் “நீயில்லாத களி அற்புதமாய்த் தானிருக்கும் இளையோனே” என்றார். உலகளந்தோன் உறுமல் போலச் சிரித்துக் கொண்டு தன் வலக்கையைத் தூணில் ஊன்றி …
