78: காலத்தூண்
விண்மீன்களின் முதல் விழிகள் ஒரு இமைப்பிற்குள் பல்லாயிரமென வானைச் சுடர்த்தன. விண்யாழி ஒவ்வொரு விண்மீனும் விழிப்பதைக் குழந்தைக் கண்களால் நோக்குபவளென வியப்புக் கொண்டிருந்தாள். முதல் நாள் களிவிழவை செருக்களத்தில் வித்தான மாவீரர்கள் விண்மீன்களாய் விழிகொண்டு நோக்குவர் என்பது குடி நம்பிக்கை. அன்று வானில் கோடிகோடியாய் விண்மீன்கள் துள்ளிப் பெருகும் என்பதை சிற்றிளமை முதலே அறிவாள் விண்யாழி. நீலழகனை நேர்நோக்கிக் காண்பதென்பது ஒவ்வொரு புலி வீரருக்கும் மீண்டும் மண்ணில் பிறப்பதென்றாகும் என்பது …
