69: எட்டுத்திக்கும்
நிலவை முன்முகப்பிற்கு வந்து நின்று சடங்கு நிலைகளை நோக்கினாள். பொற்தேரினைச் சுற்றி ஆயிரக்கணக்கான சிறு புட்கள் பறப்பன போல் பணியாட்களும் காவலர்களும் முதுசிற்பிகளும் படைவீரர்களும் அரண்மனைப் பெண்டிரும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருந்தனர். வானில் சுற்றிக்கொண்டிருந்த புறாக்கள் தாம் உன்னை விட்டு விலகுவதில்லை எனச் சொல்வது போல் தடதடவெனச் சிறகொலியெழுப்பின. நிலவை முழுதணி பூண்டிருந்தாள். சிரசில் மாணிக்கம் பதித்த தூங்குமணி நுதற் கண்ணெனத் திறந்திருந்தது. கூந்தலில் மென்நரைகள் மலர்ச்சரங்களில் பின்னப்பட்டு …
