20: முத்து எழல்

கைகளை உயர்த்தி ஆடவரை நோக்கி வழியை விலத்திச் செல்லுங்கள் எனக் கத்தியபடி வெள்ளி முகபாடம் அணிந்த யானையிலிருந்து முத்தினியும் செழியையும் தாமரைக் காம்புகளைக் கூடையிலிருந்து அள்ளியெறிந்து பூசலிட்டனர். காவலுச் சென்று கொண்டிருந்த அலவனின் மீது வெண்தாமரையொன்றை வீசினாள் முத்தினி. அதைக் கைகளில் பிடித்துக் கொண்டவன் திரும்பவும் முத்தினிக்கு எறிய அது யானையின் முகபாடத்தில் பட்டு விழுந்தது. “அலவா, இப்படி எறிந்தால் எதிரிகள் மார்புக்கு அம்பைக் குறி வைத்தாயென்றால் அது எங்கே …

19: லீலி எழல்

விழிகளில் நீர்பெருக்கு அணைந்த போது லீலியா இளம் மஞ்சென ஆனாள். கடற்கரையில் அலைந்தும் பெட்டிகளின் மேல் தாவியும் கலகலத்தும் கொண்டிருந்த குடிகள் அவளுடைய நெடிய உருவைக் கண்டு விழி மலைத்து நோக்கினார்கள். செலினி ஒரு வாத்தைப் போல கரங்களை ஆட்டி மணலில் கால்களை விசிறிக் கொண்டு லீலியாவின் அருகில் வந்தாள். புருவங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த மயிற் பீலி வர்ணக் குற்றுகளாலான கண்களை நோக்கினாள். “லீலி, என்னவாயிற்று உனக்கு புலக்காட்சி ஏதேனும் …

18: உசை எழல்

முதற் சொல்லை உசை கேட்ட போது அது ‘நீலா’ என்றொலித்தது. தன் பசுஞ் சிறகுகளைக் கொத்தி அப்பெயர் தனக்குள் எங்கேயிருக்கிறதென்று தேடிச் சலிப்பவள் உசை. ஒவ்வொரு பீலியாய்க் கொவ்வைச் சொண்டால் கீறி இது தான் நீலாவா என பார்ப்பவள். ஆலம் விழுதுகளைக் கயிறாகக் கட்டியிழைத்த மரக்கூண்டில் தன் தாய்க்கிளி நூற்ற கூட்டின் தும்புக் குவியலில் அயர்ந்து படுத்திருந்து அப்பெயரைக் கனவில் கேட்பவள். நீலழகனின் குடிலில் எந்நேரமும் அகலெரியும். அங்கு வரும் …

17: அரூபம் எழல்

மதுச்சாலையின் அன்ன வடிவக் கொத்து விளக்குகள் ஒளிக்குமிழிகளைப் போல் ஓவியங்கள் தீற்றப்பட்ட சுவர்களிலும் தரையிலும் குமிந்திருந்தன. விளக்குகள் இல்லாத இடங்களில் கருமை கலைந்த கூந்தலெனப் படிந்திருந்தது. முது பாணர்களும் விறலியரும் பாகர்களும் படை வீரர்களும் முன்னாள் வீரர்களும் குடிகளில் சிலருமென கலவையான மனிதர்கள் மரக்குற்றிகளில் அமர்ந்து கொண்டு கரும் பாறையாலான தட்டுகளிலும் சாணத்தால் மெழுகப்பட்ட திண்ணைகளிலும் செம்மண் தரையிலும் தலைகளையும் உடல்களையும் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் குறட்டை ஒலிகள் …

16: ஈச்சி எழல்

வெஞ்சுரம் நெஞ்சில் உலைய உடலை அசைக்காமல் இருண்ட குடிலின் கூரையை நோக்கியிருந்தாள் நிலவை. அவள் இக்குடிலுக்கு வந்து அரைப்பருவம் சென்றோடி விட்டது. இருளிலே இருந்து இருளிலே எழுந்து இருளிலே விழிகளைப் பார்த்து நாளெலாம் அமர்ந்திருப்பாள். நாளைக்கு ஒருவேளை கிழங்குகளோ புல்லரிசிக் கஞ்சியோ கொணர்வாள் மாதுமியாள். அவளைத் தவிர வேறு ஒருவருடனும் அவள் ஒரு சொல்லும் பேசுவதில்லை. அதிகாலையில் மாதுமியாள் வந்து அவளைக் காலைக்கடனுக்கும் குளிப்பதற்கும் அருகிலிருந்த குளத்திற்கு அழைத்துச் செல்வாள். …

15: நிலவை எழல்

வெண் மெளனம் சூடிய நித்திய கல்யாணி மலரொன்றை நிலவை கூந்தலில் நுழைத்துத் தன் விரல்களால் அழுத்திக் கொண்டாள். உசை “நீலா. நீலா” என்று மிழற்றியது. உசை தன் சிவந்த ஆரத்தை வளைத்து கொழு அலகைத் திறந்து குறுநாக்கை வெளியில் நீட்டி உள்ளிழுத்தாள். நிலவை தன் குடியிலிருந்து நீலழகனின் படைவீரர்களுடன் வனக் குடிலுக்கு அழைத்து வரப்பட்ட பொழுது அக்குடிலில் இருந்த கூண்டில் தன் பசுஞ் சிறகுகளை விரிக்காமல் உலகைத் தன் புன்விழிகளால் …

14: இருதி எழல்

ஆழி நிறைவது உப்பின் கண்ணீர் என நினைத்துக் கொண்டாள் இருதியாள். பனைகளின் பாளைகளில் கீறிய பசும் வெட்டிலிருந்து கள் கலயங்கள் நிறைவது மண்ணின் கண்ணீர் என விழிகளை உயர்த்தினாள். அலைகடலின் வெண்மணலில் வெய்யில் குழந்தை வடிவில் துயில்ந்து புரள்கிறது எனக் கால்விரல்களை அழுத்திக் கொண்டாள். விடியலின் முதற் கலனாகத் திரும்பியது துமிலரின் நீல வர்ண நெடுங்கலன் உப்பினி. கலம் நிறைய மீன்களும் சிங்க இறால்களும் குவிக்கப்பட்டிருந்தது. வலையினை எடுத்தபடி துமிலர் …

13: விருபம் எழல்

பதும்மையும் இளம் பாணனும் காட்டின் ஒற்றை வழிக்குள் நுழைந்த பொழுது குருகெனக் காலசைத்து அவர்களை நோக்கி நாணிய பின் மனையின் பின் தூணில் சாய்ந்து நின்றாள் விருபாசிகை. மனையினுள்ளே வேறுகாடாரும் அங்கினியும் இன்னும் சில பெண்களும் அகிற்புகைக்குள் தோன்றி மறைந்து மீண்டு தோன்றினர். அங்கினி வேறுகாடாரின் வெண்முடிகள் சடைத்த மரக் கரங்களைப் பற்றியபடி அவரையே விழியுற்றிருந்தாள். விருபாசிகையின் வதனம் வெண்மதியென வளைவு அமைந்தது. முகத்தில் சிறுமலர் நுனிகளெனப் பருக்கள் முகைத்திருந்தன. …

12: சுழல் எழல்

ஆடற் சித்தரின் சொற்கள் சுழல் விழிக்குள் கலங்கிக் கலங்கி மண்கலயத்தில் நாணயங்களின் புரள்வென உருண்டன. வெளியே பகலின் வெளிச்சம் பதுங்கிக் பின்னால் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் சித்தரின் சொற்கள் உருண்டு உருண்டு உடலைத் தாள முடியாமல் நடுமுற்றப் பஞ்சணையில் படுத்திருந்தாள். அவள் தன்னை அதுவரை வளர்ந்து முகிழ்க்கும் சிறுமியென்றே எண்ணிக் கொண்டிருந்தாள். சித்தரின் விழிகளில் ஒளிர்ந்த முதற் பார்வையில் தானொரு சிறுமியல்ல என்பதை உணர்ந்தாள். சில நாட்களாகவே …

11: உருகம் எழல்

பாணர் குழுவொன்று புயலில் வீழ்ந்து கிடக்கும் மரமொன்றை மான் கூட்டமொன்று தாவிக் குதித்துச் செல்வது போல் வாகை சூடனைத் தாவிச் சென்றது. கால்களின் சத்தங்கள் குளம்பொலிகளென தன்னுள் எதிரொலிக்க மயக்கிலிருந்து கண்விழித்தான். நிலவு சரிந்து தாழ்ந்து போய்க் கொண்டிருந்தது. விழிகள் திறந்து கொண்டதுமே சுற்றி அலைந்த யாழிசையின் கூவல்களும் விறலியரின் தீங்குரல் பாடல்களும் பாணர்களின் உளறல்களும் அவனைச் சுற்றி மொய்க்கத் தொடங்கின. மதுச் சாலைக்கு முன்னிருந்த நெருப்பினருகில் போர்வீரர்கள் குழுவொன்று …