20: முத்து எழல்
கைகளை உயர்த்தி ஆடவரை நோக்கி வழியை விலத்திச் செல்லுங்கள் எனக் கத்தியபடி வெள்ளி முகபாடம் அணிந்த யானையிலிருந்து முத்தினியும் செழியையும் தாமரைக் காம்புகளைக் கூடையிலிருந்து அள்ளியெறிந்து பூசலிட்டனர். காவலுச் சென்று கொண்டிருந்த அலவனின் மீது வெண்தாமரையொன்றை வீசினாள் முத்தினி. அதைக் கைகளில் பிடித்துக் கொண்டவன் திரும்பவும் முத்தினிக்கு எறிய அது யானையின் முகபாடத்தில் பட்டு விழுந்தது. “அலவா, இப்படி எறிந்தால் எதிரிகள் மார்புக்கு அம்பைக் குறி வைத்தாயென்றால் அது எங்கே …
