காட்டருவியின் சுனை

ஒரு மொழியின் பிரக்ஞைக்குள் முதற்குரல்கள் உருவாகும்போது அவை சீற்றமும் அலைவும் கொண்டவையாகவே எழும். எந்தவொரு முதற்குரல்களும் மொழியில் நுழையும் தன்மை அதுவே. நவீன பெண் தன்னிலை தனது அரசியலை வெளிப்படுத்திய முதற்குரல்களில் ஒருவர் செல்வி. இன்று வாசிக்கக்கிடைக்கும் செல்வியின் கவிதைகள் அளவில் மிகக் குறைவானவை. ஆனால் அதன் இயல்பில் துல்லியமும் ஒருங்கிணைவும் கூடியவை. சீற்றமும் அலைவும் அக்கவிதைகளின் உடல். மொழிக்குள் மெளனம் திறந்து பேசும் காட்டருவியின் சுனையொன்று செல்வியின் மனதிற்குள் …

மகிழ்ச்சியான உறுமல்

மொழிக்குள் நொதித்து மொழியைச் சீவித் தன் கலயத்தில் வார்க்கும் கலைஞர்கள் நிகழ்வதுண்டு. தமிழுக்குள் பனைகளின் முலையெனத் திரண்ட மொழி வெய்யிலினுடையது. பனைகள் நெடிது நிற்பவை, இரண்டு காதுகளில் இரண்டு கலயங்கள் தொங்கும் பனை, முதுதாயின் தோற்றம் கொண்டது, வடலிகள் சிறு கரங்கள் நீட்டி விளையாட்டுடன் வளர்பவை. பனை என்பது முழுதும் நல்லது என்பதன் குறியீடு. ஈழம் பனைகளின் வெளி. இந்த நிலத்திலும் நின்றுயிர்க்கும் பனைகளில் ஓங்கி நிமிரும் கனவென வெய்யிலின் …

இளங் கோதல்

மொழிக்குள் துணிச்சலுடன் நுழைந்து விட்ட திருடனொருவன் அதன் யாருமறியாத பொக்கிஷங்களை அள்ளித் தன் குகைக்குள் சேர்ப்பது போல் தமிழுக்குள் நுழைந்த கள்வன் இசை. அநாயசமான தோற்றம் கொண்ட எளிமையான கள்வன் என்ற தோற்றமே இசையின் கவிதைகளை வாசிக்கும் போது எழுவது. இன்னொரு தருணத்தில் மொழிக்குள் புகுந்து அதன் உடலைக் கோதிவிடும் இளங்கோதலின் சிலிர்ப்பு. நவீன தமிழ்க் கவிதையில் கொஞ்சம் அசால்டான தேர்ந்த பஸ் ட்ரைவரின் பாடல் தெரிவுகள் போல் நுட்பமும் …

பரா லைட்: வாசகர் கடிதம்

காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது …

கண்ணீர் மிக்க ஒளியுடையது

ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை. அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. அதற்குள் எப்பொழுதும் முடிவுறாத குற்றவுணர்ச்சிகளினதும் பொறுப்பேற்றலினதும் குரல் தளும்பிக்கொண்டேயிருக்கும். உறுதியான நம்பிக்கைகள் எரியும், பின்னர் அது நீறாகும், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அவரது கவிதைகள் தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்கும். குற்றவுணர்ச்சியின் முனைகள் மொழியுள் முளைக்கும் …

குழந்தையின் திகைவிழிகள்

இயற்கையுடன் கவிஞரொருவர் நிற்கும் ஒளிப்படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பது, அவரும் அவ் இயற்கையின் பகுதியென உணர்வதன் அறிதலளிக்கும் மகிழ்வு அது. மரத்தடியில் நிற்குமொருவர் அதன் பூவோ காயோ கனியோ வேரோ விழுதோ ஆகுபவர். நீர்வீழ்ச்சியின் அருகில் நிற்பவர் அதன் பெரும் வீழ்வோ உறையும் கற்பாறைகளோ கரையில் எழுந்து நிற்கும் சிறுபுல்லோ ஆகுபவர். கடலுக்கு முன் நிற்கும் கவிஞர் கடலின் அலையெனவோ மினுங்கும் நீலமெனவோ சூரியன் ஒளிந்து கொள்ளும் விரிதடாகமெனவோ ஆகுபவர். …

புலிக்கு அதன் உடலே கானகம்

பெண் தன்னிலை தன் இருப்பின் திறவுகளுக்கு மொழியின் பிரக்ஞ்ஞையில் அறுக்க வேண்டிய தளைகளை, கவிதை ஒரு தோட்டக்காரரைப் போல் தேவையற்றதை வெட்டி, தேவையானவற்றைப் பராமரித்து நீரூற்றிப் பாதுகாத்து வருகிறது. மொழிக்குள் பெண் குரல்கள் தனது வாழ்வின் ஆதார விசைகளின் உந்துதலை தன் உடல் களைய வேண்டிய புனிதங்களை உள்ளம் பொருள் கொள்ள வேண்டிய தன்னிலைகளை முன்வைத்தபடியே நகர்ந்து வருகிறது. குட்டி ரேவதி மொழிக்குள் நுழைந்த காலம் தொடக்கம் மொழியின் ஈரலிப்பை …

உருவச் சிதைப்பிலிருந்து பருமட்டான உருவத்துக்கு

* கண்ணாடிப் பேழைக்குள் நெளியும் பாம்புகள். திருவிழாத் தெருக்கள் கலகலத்துக் கொண்டிருக்கின்றன. ஞாபகம் தன் அந்தக் கணத்திலிருந்து ஆதிக் கணம் வரை திரும்பத் திரும்ப அலைகிறது. பாதளக் கிணற்றில் ஓடும் மோட்டார் சைக்கிளைப் போல் மறுபடியும் மறுபடியும் வளைய வளைய சுற்றுகிறது. ஒரேயொரு “கிளிப் ” வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். அம்மா ஞாபகங்கள் இராத்திரித் திருவிழாவில் சீலையில் முடிந்திருந்த தாள்களில் சிலவற்றைத் தருகிறாள். விபூதி வாசம் குங்கும முகம். எல்லா …

பொன் வாள்

மொழிக்குள் சில கவிஞர்கள் அரிதான ஒருங்கிணைவுகளைப் பெறுவார்கள். ஒரு மக்கள் திரளின் கூட்டு மனத்தின் பொன் வாளென அவர்களது கவிதைகள் திரண்டு வருவன. அவை போருக்குரியவை அல்ல. அம்மக்களின் அகத்தின் ஒவ்வொரு இழைகளும் நுட்பங்களும் உருகித் தங்கமென வழிந்து, பரவி, இறுகி, பிடியிடப்பட்டு, கூர் தீட்டப்பட்டு தகதவென மின்னி உறைபவை. சேரன் ஈழத்தின் நிலத்தையும் அகத்தையும் மொழியுள் திகழ வைத்தவர். அவரின் நிலக்காட்சிகளின் அவதானிப்புகள் பலநூறு வரிகளின் மூலம் ஈழத்தை …

நன்றியின் நிழல்: ஒரு குறிப்பு

வாழ்க்கைக்குத் திரும்புதல் கிரிசாந்தினுடைய முதலாவது கவிதைத் தொகுதி, குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வந்திருக்கிறது. முகநூலிலும் பிற ஊடகங்களிலும் நாளாந்தம் கவிதைகள் என எழுதப்படுகின்றவற்றில் எது கவிதை எனத் தேடிச் சலிக்கின்ற கவிதை மனங்களுக்கு ஆத்மார்த்தமான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக இதில் உள்ள அகம் சார்ந்த கவிதைகள், நிஜ உலகின் நிகழ்வெளியில் நின்று மனதைப் பிய்தெடுத்து ஒரு தனித்த வெளியில் மனதை மிதக்க விடுகின்ற பித்து …