43: ஓயா மழை

காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று காமத்தின் வாயில் விழுந்து கொள்வாள். உடலை விழைவின் கலமென ஆக்குவதை அவள் தன் அத்தைகளிடமிருந்து கற்றாள். பட்டினத்தின் பரத்தையர் வீதிகளில் அங்கினியினுடையது கடைசி இல்லம். நாகதேவிக் கோவிலின் காட்டு விளிம்பில் அமைந்திருக்கிறது. அவளது இல்லத்தின் …

42: இருட் குழவிகள் : 02

“மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் காலத்தில் அப்பூரணத்தின் விளிம்புகள் கரைவதை நம் அகம் நோக்க மறுக்கிறது. நிலவை விழுங்கும் பாம்பென இருள் மூடிக்கொண்டாலும் எங்கோ அப்பூரணம் நிலை கொண்டிருக்கிறது என உளத்தை ஆற்றுகின்றன. நாம் கனவுகளின் குழவிகள் கூத்தரே. கனவையன்றிப் …

41: இருட் குழவிகள்

பேரொளியே நீ இருட்டின் குழவிமேதமையே நீ பித்தின் குழவிஅழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்அழியாத இருட்டே நீ வாழ்கஉன்னை வணங்குகிறோம்எங்களை விட்டு அகலாதிருகருமையே நீயே பேரழகுஇருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்இருளே விழியாகுக இருளே வழியாகுகஇருளே துணையாகுகஇருட்டின் மர்மங்களே எங்களைக் காக்குகஇருள் நாவுகளே எங்களின் புலனாகுகஇருள் கலைந்து விடியல் எழாதிருக்கட்டும்இருளே நம் பொழுதாய் அமைகஇருளின் குழவிகளே இங்கே எழுகஇருளின் கனவுகளே இங்கே பொலிக கானகம் இருளிலிருந்து தலை சிலுப்பி விழித்துக் கொண்ட …

40: ஆடுகாய்கள்

ஆட்டம் முடிந்ததும் லீலியா செலினியைக் கவனிப்பற்கென தானகியுடன் சென்றாள். நிலவை எழுந்து நின்று சதுரங்கப் பலகையை நோக்கினாள். இரு அரசிகள் கட்டத்தின் நடுவிலே வீற்றிருந்தார்கள். சுற்றிலும் ஆடுகாய்கள். நீலனுடன் சதுரங்கம் விளையாடுவது நிலவைக்கு சொல்லாடும் மகிழ்ச்சியளிப்பது. அவன் சமமான எதிரி. இரண்டு சமமான எதிரிகள் சந்தித்துக் கொள்ளும் போது தான் ஆடுகாய்கள் புன்னகைத்துக் கொள்கின்றன என நீலன் சொல்லுவான். அவன் இயல்பைப் போலவே சலிக்காமல் விளையாடுவன். அவன் எண்ணியதை அடைய …

39: ஆட்டம்

நிலவையின் மஞ்சத்தறையில் லீலியா உசையை நோக்கியபடி நின்றாள். “நீலா” “நீலா” என மிழற்றினாள் உசை. பச்சையின் எழிலாலான உசையின் சிறகுகளை நோக்கியவள் கூண்டின் வாயிலைத் திறந்து உசையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள். அகலில் ஏந்திய சுடரென உசை அவள் கரத்தில் நிமிர்ந்து நின்றாள். நிலவை அவளை நோக்கி விட்டு மொழிபெயர்ப்பாளர் பட்டினம் சென்று விட்டார் என்ற தகவலைக் கொணர்ந்த தானகியை சதுரங்கப் பலகையை எடுத்து வரும் படி சொன்னாள். இரு …

38: ஆடலன்

புலரியில் மெல்லிய நடையெடுத்து மேனி குளிர்காற்றில் மெய்ப்புக் கொண்டு தோகைவிரித்த மஞ்ஞையின் புன் அகவலொன்று சிற்பனின் செவிகளில் நுழைந்தது. அவன் விழிகளைத் திறக்காமல் அகவலின் எதிரொலிகளைத் தனக்குள் கேட்டபடியிருந்தான். அவன் தேகம் அடவிக் குளிரில் விறைத்து ஆண்குறி நெடும்பனையென ஆடைக்குள் புடைத்து நின்றது. குறி மட்டுமே உடலெனத் தன்னை உணர்ந்தான். மஞ்ஞையின் அகவலில் துடிக்கும் காமத்தை எண்ணி நகையொன்று அவனுள் தழைத்தது. காமம் எனும் முதலின்பமே அவனைத் தீராது உலைக்கும் …

37: சோம வதம்

வெண்மையும் சாம்பலும் கருமையும் மேனியெனக் கொண்ட வானவில் வண்ணங்களும் புள்ளிகளும் நட்சத்திரங்களும் மிகுந்த ஆயிரக்கணக்கான புறாக்கள் பட்டினத்தின் புகைப்பெருக்குக்கு அஞ்சி அரண்மனை முன் முகப்பை அண்டி மிதந்து செட்டைகளைப் படபடவென அடித்துக் கொண்டு மண்ணிறங்கியும் விண்ணளந்தும் சுற்றின. புகைப்பெருக்குத் தீண்டாத தூரத்திலிருந்த அரண்மனை முகப்பில் நின்றிருந்த நிலவை புறாக்களின் சிறகொலியால் மெய்ப்புக்கொண்டாள். ஏதென்றறியாத கணத்தில் விழிநீர் திரண்டு ஊற இமைகளை மூடிக்கொண்டு நின்றாள். உள்ளிருந்த சுவாசம் மெல்ல அசைந்தேற தித்திக்கும் …

36: அறக்கொடியாள்

யவன மருந்துச் சாறை நெஞ்சில் விரிந்து நீண்டிருந்த சதுப்புப் புண்ணில் ஊற்றிய பின் பச்சை வண்ண அடர்த்தியான நீராவியால் நீலனது மேனியைச் சுற்றிப் பரவினார்கள் யவன மாந்திரிகக் குழுவினர். நீலழகன் தன் மஞ்சத்தில் தலையெழாது நீரில் அரையுடல் செவி வரை மூழ்கியிருப்பதென எண்ணிக் கொண்டான். ஒலிகள் கேட்கவில்லை. புகையிலிருந்து இன்னொரு புகை வெளியேறிச் செல்வது போல் இருட்டில் மாந்திரிகக் குழு சென்று மறைந்தது. முற்புலரியில் நீலழகனின் அகம் மயக்கை மீறியெழுந்தது. …

35: சூர்விழி

மாயை தன் பலவண்ணக் கூந்தலால் இருளைப் போர்த்தியது. இருள் ஒவ்வொரு வண்ணத்திலும் கலந்து அவ் வண்ணமென ஆகியது.  வண்ணங்களால் தன் விழியை இழந்தது இருள். வண்ணங்களால் தன்னை நோக்கியது. தானென அறிந்த ஒன்றை வேறெனக் கண்டது. எது தான் என அறியாமல் திகைத்தது. மாயை சிரித்தது. கூந்தல் நீண்டு நீண்டு ஒவ்வொரு திசையிலும் படர்ந்தேறியது. ஆடற் சித்தரின் விழியிடைவெளியால் அக்கூந்தல் நுழைந்து இமையென ஆயிற்று. இமைக்குந் தோறும் இருளை வண்ணங்கள் …

34: ஏழு அன்னையர்

அழியும் ஒரு துளி அழிவே மீதொரு அழிவின் முதல் துளியாகியது. அழிவில் எஞ்சும் அழியாத ஒன்றே விழைவென உருக்கொண்டது. அது காக்கையெனக் கருஞ்சிறகுகள் விரித்து கூர் கரும் அலகுகள் மின்ன கொழு கரும் விரல்கள் கொண்டு ஒவ்வொரு இச்சையையும் தூக்கி அகாலத்தில் எறிந்தது. எறிந்ததைக் கொத்திக் கூடிப்பகிர்ந்துண்டது. அலகில் எஞ்சியவற்றை மேலும் அலகெனப் பகுத்துப் பரிமாறியது. கருமையின் குழவியே அழிவின் சிறகென எழுந்து காக்கையாகியது. காக்கையே உனது வாகனம். காலங்களை …