‘பெருங்காவியம்’ எனும் என் புதிய சிறுகதை நீலம் இதழில் பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள், நண்பர்கள் வாசித்து கருத்துகளை Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இணைப்பு : பெருங்காவியம்
லீலி – கடிதம்
கதை நல்லா இருந்தது. உங்க கவித்துவமான மொழி நடை, இந்த கதையை ஒரு படி மேலெடுத்து செல்கிறது. “காதலைத் தட்டி எழுப்பாதீர்…தானே விரும்பும் வரை” இந்த ஒற்றை வரி மொத்தக் கதையையும் தாங்கி நிற்கிறது. ரோசி சிஸ்டருடான லீலி அம்மாவின் உறவு பற்றி வெளிப்படையாக…
கொடிறோஸ் – கடிதம்
வணக்கம் கிரிசாந், கொடிறோஸ் குறுநாவல் வாசித்தேன். மிக நேர்த்தியா எழுதி இருக்கிறீங்க. கதைக்கு உள்ளே வாழ்ந்தது போன்ற அனுபவம் கிடைத்தது. சில இடங்களில் கண்கள் பனித்தன. அம்மாவை நான் இழந்த போது எனக்கு முப்பது வயது. அவருக்கு இரத்தத்தில் கிருமி தொற்று.. நீண்ட காலம்…
நிஜந்தன் தோழன்
நிரப்புவதற்கு அப்பால் நின்றுவிட்டதுதூரம் முதலில் உன்னைத் தின்றுவிட்டிருக்கின்றனஇருவரில்ஒன்று போலிருந்த காயங்கள் மிச்சம்பேசியிருந்த கொஞ்ச வார்த்தைகள்,இனியில்லைமருந்துகளுக்கும் வலிகளுக்கும்மேலால் மேவி எழுகிற புன்னகை.அறியு முன்பேநழுவிவிட்ட முகமும் குரலும், சற்றுத் தாமதமாகவே வென்றிருக்கலாம் நீஉந்த வாழ்வையும்இந்தச் சாவையும் இனியில்லை உனக்குஇருண்டகாலத்துக் குரல்கள்,நித்திய விடுதலை,சமாதானிக்கட்டும் உனது வெண்மை. இல்லாது போனகருணையின்…
நிஜந்தன் : அஞ்சலி
நேற்று மதியம் திடீரென்று என் ATM திறவுஇலக்கம் மறந்து விட்டது. சில கிழமைகளாக காசு எடுக்கவில்லை. எவ்வளவு நினைவில் துழாவியும் இலக்கங்கள் பகடைக் கட்டைகள் போல ஒவ்வொரு முறையும் புதிதாகச் சுழன்று விழுந்தன. நாளிற்கான மூன்று தடவைகளை அழுத்தினேன். மூன்றும் தவறு. தசை நினைவென…
லீலி : சிறுகதை
இம்மாதம் அச்சாகியிருக்கும் பங்குனி மாதத்திற்கான ஜீவநதி இதழில் எனது புதிய சிறுகதையான ‘லீலி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
மகேஸ்வரன் சேர் : அஞ்சலி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் ஆறாம் வகுப்பிற்குச் சேர்ந்து முதல் நாள் ஆங்கிலப் பாடம். மூன்று அடுக்குகளாக உயர்ந்திருந்த கட்டடத்தில் என் வகுப்பிருந்தது. மகேஸ்வரன் சேர் துணி ஜீன்சும் அரைக்கைச் சேர்ட்டும் போட்டுக் கொண்டு வந்து ஆங்கிலப் பாடம் தொடங்கினார். அவரது உச்சரிப்பு மிகவும்…
பரிஸ் – கல்விரல்
பரிஸ் நகரில் கடுதாசி நட்சத்திரம், கல்விரல், சிறகை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கின்றன. சுவரொட்டியில் உள்ள இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.
புஞ்சி மல்லி : சிறுகதை
இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதையான ‘புஞ்சி மல்லி’ வெளியாகியிருக்கிறது. வாசித்து உங்கள் கருத்துகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
பட்டு நூல் – கடிதம் 2
பட்டு நூல் வாசித்தேன். மிக அருமையான கதை. ஒரு யுத்த பூமியில் பண்பாடு என்பது எப்படி இருக்கும்னு காமிச்சிருக்கீங்க. அதை கதையில் விவாதமா அடுக்கடுக்கி வைச்சு சொல்லியிருப்பதும் அழகு. “பண்பாட்டில இருக்கிறதென்பது மீன் தண்ணிக்கை இருக்கிற மாதிரி …. உன்ர உடம்பால அதை அறிய…