கனவாகவும் காவியமாகவும்
இம்மாத (ஏப்ரல்) நீலம் இதழில் வந்துள்ள ‘பெருங்காவியம்’ சிறுகதை எனக்குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது சிறுகதை அல்ல. ஏழு கன்னிமார்கள் என்னும் தொன்மத்தை மறு உயிர்ப்புச் செய்து காட்டியுள்ள அப்புனைவு கவித்துவமான மொழியுடன் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஈழத்தனி நாட்டுக்கான போர்க்காட்சிகளின் சில கீறல்களையும் மனவோட்டங்களையும் உருவகமாக எழுதிக் காட்டியுள்ள அப்பனுவல், ஈழப்போரில் நடந்த நிகழ்வுகளும் அழிவுகளும் தன்னையழித்துக்கொண்ட வீரதீரங்களும் தியாகங்களும் குமுறல்களும் பகையழித்த கொலைகளும் பெருங்கனவாகிப் போனது …
