83: புலரியாட்டம்
“முன்னை நாள் களியென்பது அடுத்த நாள் வேடிக்கையே” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் ஓசையிலான். அவனது இடையாடை புழுதியும் சேறும் கொண்டு ஆக்கியதைப் போல் நிறத்திருந்தது. அவனது குழலில் சிறுமலர்ப் பிசிறல்கள் ஒட்டியிருந்தன. காதின் ஒரு மணிக்குண்டலம் எவ்விடம் தொலைந்ததென செவித்துளையை உருட்டிக் கொண்டிருந்தான். அவன் முன்னே ஓளித்துண்டுகள் விழும் மூங்கில் சாளரத்தில் சாய்ந்தபடி திரிபதங்கன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். திரிபதங்கனின் மேலாடையற்ற உடல் போர்வேழத்தின் முகபாடமென மின்னிக் கொண்டிருந்தது. அவனது …
