தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

‘வளர்’ காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் வரை குறித்து அவற்றை எழுத்தாக்கி முன்வைக்கும் அவரது பணி முக்கியமானது. அவர் குறிப்பிட்டிருக்கும் எழுத்துப்பிழை மற்றும் மொழிநடை தொடர்பிலான கருத்துகளை உளமார ஏற்கிறேன். எழுத்தாளராகவும் இதழியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவரது பணிகளை நான் …

சூல் கொளல்: 02

இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த பொழுது அதன் சாயல்கள் கொண்ட கவிதை வரிகள் எழுதப்படலாயின. அவை பின்னர் பண்பாட்டில் வேர் கொண்டு தனக்கான படிமங்களை அடைந்தன. உலகெங்கும் அரசின் இராணுவங்கள் …

சூல் கொளல் : 01

பெருமழை வருவதற்கு முன் மேகம் கனிந்து காற்றில் கூடும் ஈரமென தமிழ்க்கவிதைக்குள் விடுதலை பற்றிய கனவு வந்து சேர்ந்தது. காலனித்துவ ஆட்சி முடிவடைந்து இலங்கை தனி நாடாக ஆவதற்கு முன்னிருந்தே இத் தீவில் சிங்கள, தமிழ் இனத்துவ முரண்பாடுகளுக்கான வரலாறுகள் உயிர்பெற்று இரு சர்ப்பங்களென வளர்ந்தன. காலனித்துவ ஆட்சிக்கெதிரான போக்கிலே சிங்களத் தேசியவாதமும் தமிழ்த்தேசியவாதமும் வளர்ந்து வால் நீண்டிருந்தன. சிங்களமும் பவுத்தமும் அநகாரிக தர்மபாலாவினால் முன்வைக்கப்பட்ட சமநேரத்தில் சைவமும் தமிழும் …

சூதர்கள், பாணர்கள், கவிஞர்கள்

அறங்களை ஆக்குதலும் காத்தலும் விரித்தலும் அவை வழுவும் போது சுட்டுதலும் கவிதையின் முதற் தொழில். தமிழ்க் குடியின் நெடுவரலாற்றில் கவிஞர்களின் பணி இதுவே. வாழ்க்கைக்கான மேலான கனவுகளை ஆக்கி அளித்தலும் அளிக்கப்பட்ட கனவைக் காத்தலும் சொற்களின் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓரு வகையில் மானுட நிகழ்வை அதன் எளிய அன்றாடத் தர்க்கங்களிலிருந்து விடுவித்து இந்த விலங்குக் கூட்டத்தின் மேலான தன்மைகளைப் புனையும் செயல் கலை. எது நேரிடினும் அறத்தின் பொருட்டு …