பன்றியுமாய் அன்னமுமாய் சோதியுமாய்

  தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்பல்லவி எனும் இதழ் தனது நாற்பதாவது இதழினை ஈழத்துச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. அவ்விதழில் எழுத்தாளர் கருணாகரனின் நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. போருக்கு பிந்தைய வாழ்க்கை, இலக்கியச் சூழல் பற்றியே கேள்விகள் மையங் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியில் கருணாகரன் இப்படி பதிலளிக்கிறார், “இன்னொரு தரப்பினர் போர் உண்டாக்கிய அனுபவங்களின் நிலைநின்று பேச விளைகிறார்கள். குறிப்பாகப் போரையும் அது உண்டாக்கிய பாதிப்பையும் …

‘கனவே திறந்து விடு, உன் கதவை’  

(கருணாகரன்) ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார். ‘…இரவு; இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்; நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதில் கூட சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் கனவுகள் தம் அர்த்தத்தை இழந்தவைதான்..’ ‘… வெளியே பதற்றமற்று மௌனமாய் நிற்கும் மரங்களின் நிழல்கள் கீழே கிழிந்து போயுள்ளன…’ …

ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு

பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், …

பொன் நாள்

இன்றோடு ஐம்பது கவிஞர்களை எனது சிறு குறிப்புடன் பட்டியலாக்கமும் செய்து முன்வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒருவரெனக் கவிஞர்களுடனும் கவிதைகளுடனும் வாழ்ந்த இப்படியொரு காலம் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்திருப்பது. இத்தனை வருட வாசிப்பின் வழி எனக்குள் சேகரமாகிவரும் கவிதை பற்றிய மதிப்பீடு, பார்வைகளை உருவாக்கிய இக் கவிஞர்கள் என் முன்னோடிகள். ஒவ்வொருவரையும் மதிப்புடன் இக்கணத்தில் வணங்கிக் கொள்கிறேன். சதீஷ்குமார் சீனிவாசன், தர்மினி, ரஜிதா, ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை, யோகி, …

கண்ணீர் மிக்க ஒளியுடையது

ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை. அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. அதற்குள் எப்பொழுதும் முடிவுறாத குற்றவுணர்ச்சிகளினதும் பொறுப்பேற்றலினதும் குரல் தளும்பிக்கொண்டேயிருக்கும். உறுதியான நம்பிக்கைகள் எரியும், பின்னர் அது நீறாகும், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அவரது கவிதைகள் தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்கும். குற்றவுணர்ச்சியின் முனைகள் மொழியுள் முளைக்கும் …