வசைவெளிக் கண்ணிகள்

புத்தர் தன் சீடர்களுடன் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் இனிப்புகளையும் சுவையான உணவுகளையும் கொணர்ந்து புத்தருக்கு அளிக்க முயன்றனர். புத்தர் அவற்றை ஏற்க மறுத்தார். அம்மக்கள் அவற்றைத் தாங்களே திரும்ப எடுத்துக்கொண்டு சென்றனர். அடுத்த கிராமத்திற்குள் நுழைந்த போது அங்கிருந்த மக்கள் புத்தரை வசைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும் ஏசிக் கொண்டிருந்தனர். புத்தர் அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது சீடர்களுக்குத் தாங்க முடியாத கோபம் ஏழுந்தது. …

புறமுதுகிடுதல்

விதை குழும செயற்பாட்டாளர்களின் பாலியல் சுரண்டல் குறித்த எதிர்வினையாகவே ஆரம்பித்த உரையாடல் இப்போ வேறு எங்கோ போய் நிற்கிறது. கிரிசாந் கெட்டிக்காரன். அறிவாளியான தன்மீது பாமரர்கள் தொடுக்கும் தாக்குதல் என்பதுபோல திசைதிருப்பி அங்கிருந்து ஜெயமோகன் மறுதலிப்பாக மாற்றி பாலியல் குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக செய்திருக்கிறார். சரி, நாம் திரும்ப விசயத்துக்கு வருவோம். சமூகத்தில் சக மனிதர்கள் செய்யும் பிழைகளை, சுரண்டல்களை சுட்டிக்காட்டுவது, கண்டிப்பது, கட்டுரை எழுதுவது ; அதே தம் வாழ்வில் …

சராசரிகளுடன் உரையாடுதல்

சமூகத்தின் பெரும்பான்மை என்ற தொகுதி சராசரிகளின் திரள். எந்தவொரு அறிவியக்கத் தரப்பும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் இடைவிடாது உரையாடிக் கொண்டிருப்பது சராசரிகளுடன் தான். சாராசரிகளின்றிச் சமூகமில்லை. அவர்களைக் கேலியாகவோ வெறுப்புடனோ ஒரு எழுத்தாளர் அணுகத் தேவையில்லை. முகநூலில் என் மீது நண்பர் ஒருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதையொட்டி உருவான உரையாடலுக்காவும் எனது புனைவு ஒன்றிற்கு வந்த வாசகர் கடிதத்திற்கான எதிர்வினையொன்றிற்கும் நான் பதிலளித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு முகநூலிலும் எதிர்வினைக்கு இணையத் …

சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும்

(குறிப்பு: எனது எழுத்துக்களுக்கான உரையாடலை இணையத்தளத்தில் மாத்திரமே செய்வேன். சமூக வலைத்தளங்கள் அவற்றைப் பகிர்வதற்கானவை மட்டுமே. வாசகர்கள் தங்கள் பார்வைகளை, கேள்விகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பி வைக்கப்படாத வேறு எந்த எதிர்வினைகளுக்கும் இனி பதிலளிக்க மாட்டேன்) வணக்கம் சிவா மாலதி, பிரியத்துக்குரிய பெண் என்ற புனைவுக்கான கடித பதிலொன்று குறித்த உங்களது அவதானங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அப்புனைவு எதிர் உரையாடற் தன்மை கொண்டது. …

குத்திக் கிளறலும் அரிதாரத்தை அசிட் ஊற்றிக் கழுவுதலும்

கருத்துச் சுதந்திரம் என்பது செயற் சுதந்திரமல்ல என்ற அடிப்படையிலிருந்தே எனது பார்வை உருவாகியிருக்கிறது. கருத்துகள் முன்னேற்றமடைவதற்கு, முரணியக்கங்கள் தமக்குள் தொடர்ந்து உரையாடி, ஒரு சமரசத்தை எட்டி, மேலும் தொடர்ந்து விவாதித்து, விரிவாகிக் கொண்டு செல்லக்கூடிய மாபெரும் உரையாடற் பரப்பாக ஆக வேண்டும், அதில் ஒரு சிறு துளியே நாம் ஒவ்வொருவரும் ஆற்றும் கருத்தியல் பங்களிப்பு. ஒவ்வொரு தரப்பிற்கும் அவற்றுக்கான வரலாற்றுப் பின்னணிகள், அதன் வழி உருவான பார்வைகள், நலன்கள் எல்லாமே …