கல்விரல் – குறிப்பு 3

கிடாயில் அமர்ந்திருக்கும் பிசாசொன்று போரின் வடுக்களை மேய்கையில் அலையுறும் பெண் மனம் இந்நாவல். போருக்குப் பின்னான ஒரு நிலத்தில், செல்லடித்து விழுந்து கிடக்கும் ஒரு பனை மரத்தில், தனது கூட்டைத் தொலைத்துவிட்டு தேரிக்காடெங்கும் தேடியலைகிற தூக்கணாங் குருவியொன்று அதன் குஞ்சுகளின் அவலத்தை கழுகுகளுக்கும் பாம்புகளுக்கும் முன் நின்று பாடுவதாய் ஒரு நாவலை எழுதி முடித்தல் கடினமானது. இயக்கத்தில் இருந்த போரளிகள் குறித்து பிற்காலச் சூழலில் எழுதப்பட்ட கதைகள் வெகு குறைவாகவே …

கல்விரல் – குறிப்பு 2

எழுத்தாளனின் படைப்புகளைப் புரிதலில் வெளியீட்டாளரின் அரசியல் நிலைபாடு ஒரு மறைமுகச் சூழலாக செயல்படும். வெளியீட்டாளர் எந்த வகை நூல்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். எவற்றைத் தவிர்க்கிறார்கள் என்பதன் வழியே அந்தப் படைப்புகளின் அரசியல் ரேகைகள் எவ்வாறு வடிகட்டப்படுகின்றன என்பதை கவனிக்கலாம். படைப்பு தனித்த உருட்டில் நின்றாலும், எழுத்தாளர் ஒரு சமூகப்பிராணி என்பதால் அரசியல் படைப்பின் அடுக்குகளில் இயல்பாகவே ஒலித்துத் தோன்றுகிறது. அது வெளிப்படையான கருத்துரையாய் அல்ல, கதாபாத்திரத் தேர்வுகள், குரல் மற்றும் மௌனப் …

கல்விரல் – இந்து தமிழ்

இன்றைய தினம் இந்து தமிழ்த் திசையில் கல்விரல் பற்றி சிறிய குறிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். நாவலை வாசித்து அவதானிப்புகளுடன் முன் வைத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.

மூதன்னை தொட்ட மலர்

நேற்று மாலை ‘குக்கூ’ சிவராஜ் அண்ணாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. ஓர் ஒளிப்படமும் குரற்பதிவும் இருந்தன. காந்தியவாதத்தின் பழுத்துக் கனிந்த தமிழ் முகமான மூதன்னை கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன் கொடிறோஸ் வாசித்துக் கொண்டிருந்தார். கண்கள் விம்ம அக்காட்சியை திரும்பத் திரும்பப் பார்த்தேன். எத்தனை களங்களைக் கண்ட கண்கள், எத்தனை பேராளுமைகளைக் கண்ட கண்கள், எத்தனை மானுட முகங்களின் துயர் கேட்டுக் கசிந்த கண்கள், எத்தனை அனலுடன் மானுடத்திற்கெனச் சினம் கொண்ட கண்கள், …

கல்விரல், சிறகை : commonfolks

சென்னை புத்தகக் கண்காட்சியில் கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினூடாக வெளியாகியிருக்கும் கல்விரல் (நாவல்), சிறகை (குறுநாவல்) ஆகியவற்றை இணையத்தளத்தில் வாங்குவதற்கான இணைப்புகள் கீழேயிருக்கின்றன. இந்தியாவில் வாழ்கின்ற வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வாசகர்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். கல்விரல் : இணைப்பு சிறகை : இணைப்பு

சிறகை : வெண்மத்தகக் குவியல்

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி ஆனைக்கோடரி வெளிவந்திருந்த சமயம் இலங்கை சென்றிருந்தேன். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களின் பின். அத்தனை வருடங்களும் மூளைக்குள் நொதித்துக் கொண்டிருந்த நிலத்தையும் மனிதர்களையும் நேரில் எதிர்கொள்ளும் படபடப்பு விமானத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. அடிக்கடி கைகளைக் கோர்த்துக் கால்களுள் இடுக்கிக் கொண்டு தடித்த யன்னலுக்கு வெளியே முடிவே இல்லாமல் விரிந்திருக்கும் நீல வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கால்களின் கீழே வெண் மத்தகக் குவியல்கள் போல மேகக் …

ஆழப் புதைந்திருப்பது

“வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு வகையானவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். சொல்லிச் சொல்லி சுருக்கமாகவே அதன் இழைகளை சொல்லி …